மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நாவல் தமிழ் நாட்டில் பெரும் பரபரப்பை கிளப்பியது. அந்த நாவலில் திருச்செங்கோடு பகுதி பெண்களை தவறாக சித்தரிக்கப்பட்டிருப்கதாக கூறி அந்த பகுதி மக்கள் கடையடைப்பு, மறியல் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தினர். எழுத்தாளர் பெருமாள் முருகன் அந்த நாவல் உள்ளிட்ட தனது அனைத்து படைப்புகளையும் திரும்ப பெறுவதாகவும், இனி எழுதப்போவதில்லை என்றும் அறிவித்தார். படைப்பாளர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக எழுத்தாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய நாவலின் பெயரிலேயே ஒரு திரைப்படத்தை புதியவர்கள் இணைந்து உருவாக்குகிறார்கள். நவீன கூத்துப்பட்டரை சார்பில் ஆதிரா பாண்டிலட்சுமி என்பவர் இயக்குகிறார். திருச்சி வேலுச்சாமி கதை, வசனம் எழுதுகிறார். வல்லம் அலீம் இசை அமைக்கிறார், அண்ணாமலை ராஜா ஒளிப்பதிவு செய்கிறார்.
"இது அந்த நாவலை தழுவிய படம் அல்ல என்றும். ஒரு சிவபக்தையின் கதை என்றும், ஆணுக்கு இணையான உரிமைகள் அனைத்தும் பெண்ணுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தும் கதையம்சம் கொண்டது என்றும் பட வட்டாரங்கள் தெரிவிக்கிறது. நாவலின் தலைப்பை படத்திற்கு வைக்க பெருமாள் முருகனிடம் முறையான அனுமதி பெறப்பட வில்லை. அதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.