ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜயசேதுபதி நடிப்பில் வெளியான படம் வன்மம். இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார் ராண்டில்யா. இவர் தற்போது சில படங்களிலும் வித்தியாசமான கேரக்டர்களில நடித்துக்கொண்டிருக்கிறார்.
மேலும், சினிமாவில் நடிகராவதற்கு முன்பு, தரகு, அறியான் போன்ற படங்களில் உதவி இய்ககுனராக பணியாற்றி வந்த இவர், இயக்குனர் நலன் குமாரசாமியிடம் நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்காக நெஞ்சுக்கு நீதி என்ற குறும் படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார். அதோடு காக்கி, கனாக் காணும் காலங்கள், அன்பே சிவம் ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.
அதையடுத்து, கொக்கரக்கோ என்ற குறும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவருக்கு சிறந்த நடிகருக்கான பரிசு கிடைத்திருக்கிறது. அதேபோல் மெளனகீதம் என்ற குறும் படத்தில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதினையும் பெற்றிருக்கும் ராண்டில்யா, இதுவரை 25 குறும் படங்களில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார். அந்த வகையில் நாளைய இயக்குனரில் நடிகர், ஒளிப்பதிவாளர், உதவி இயக்குனர் என பன்முகம் கொண்டவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.