ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர்களில் மரியான் பார்வதி குறிப்பிடத்தக்கவர். மலையாளத்தில் 2006ல் வெளியான அவுட் ஆப் செலபஸ், நோட் புக் போன்ற படங்களில் நடித்து பிரபலமான இவர், அதன்பிறகு தமிழுக்கு வந்து, சசி இயக்கிய பூ படத்தில் ஸ்ரீகாந்துடன் நடித்திருந்தார். அந்த படத்தில் மாரி என்ற முக்கிய கதாபாத்திரத்துக்காக தனது உடம்பை கருப்பாக மாற்றி நடித்த பார்வதியின் நடிப்பு அந்த சமயத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனபோதும், அவருக்கு அடுத்தபடியாக தமிழில் படங்கள் புக்காகவில்லை. அதனால் மீண்டும் மலையாளத்துக்கு சென்று விட்ட பார்வதி, சென்னையில் ஒருநாள் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தார். அதையடுத்து மரியான் படத்தில் தனுசுடன் மீண்டும் ஹீரோயினாக நடித்தார். ஒவ்வொரு காட்சிகளிலும், அவர் வெளிப்படுத்திய நடிப்பு பேசும்படியாக இருந்ததால், இந்த முறை பார்வதி தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்து விடுவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.