ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தற்போது தென்னிந்திய படங்களிலும் கவனத்தை செலுத்தி வருகிறது. கோச்சடையான் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரியான ஈராஸ் நிறுவனம், தொடர்ந்து கத்தி, லிங்கா, டார்லிங், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களின் ஆடியோ ரைட்ஸையும் வாங்கி வெளியிட்டது. இதுதவிர ரஜினியின், கோச்சடையான், லிங்கா உள்ளிட்ட சில படங்களையும் வாங்கி வௌியிட்டது.
இந்த நிறுவனங்கள் வௌியிடும் படங்களின் பிரஸ்மீட்டில், சம்பந்தப்பட்ட பெரிய நடிகர்கள் யாரும் பங்கேற்பது கிடையாது. அப்படியே பத்திரிகைகளுக்கு சம்பந்தப்பட்ட நடிகர்கள் பேட்டியளித்தால் அது ஆங்கில பத்திரிகையாகத்தான் இருக்கும். தமிழ் பத்திரிகையாளர்கள், படக்குழுவிடம் பேட்டி கேட்டால் அவர்களை புறக்கணித்து விடுகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகையருக்கு இந்த ஆங்கில நாளிதழுக்கு, இந்த டிவிக்களுக்கு மட்டும் பேட்டி கொடுங்கள் என்று முன்கூட்டியே சொல்லி அனுப்பி விடுகிறது ஈராஸ். அவர்களும் அப்படியே செய்கின்றனர். இதுபோன்ற நிகழ்வு கோச்சடையான் முதல் இப்போது வௌியாக இருக்கும் ஷமிதாப் வரை தொடர்கிறது. இதனால் தமிழ் மீடியாக்கள் ஈராஸ் மீது கோபத்தில் இருக்கின்றனர்.