ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இளவரசன், திவ்யா காதலும் அவர்களை நீதிமன்றம் மூலம் உறவினர்கள் பிரித்ததும். அதையொட்டி நடந்த கலவரங்களும், பின்னர் இளவரசன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் பரபரப்பான சம்பவங்களாக தமிழ்நாட்டில் நடந்தது. இந்த காதலையும், அது தொடர்பான சம்பவங்களையும் மையமாக கொண்டு, ''இலக்கணம் இல்லா காதல்'' என்ற படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதில் நடிக்கும் ரமேஷின் கேரக்டர் பெயர் இளவரசன். அவருக்கு ஜோடியாக நடிக்கும் கவிதாவின் பெயர் திவ்யா. ரமேஷ்தான் படத்தின் தயாரிப்பாளரும். இவர் வாச்சாத்தி என்ற படத்தில் நாயகனாக நடித்தார். அந்தப் படம் வாச்சாத்தி சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது.
இந்தப் படத்தில் ராதாரவி, நந்தினி, கவுசல்யா, ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். தீபக் மணி கேமராமேன், அம்சத்வனி இசை அமைப்பாளர். தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. "இது முழுக்க முழுக்க கற்பனை கதைதான். அது சில உண்மை சம்பங்களின் சாயல் இருக்கும்" என்கிறார் இயக்குனர் வி.சி.ஜெயமணி.