ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நாய்களை வைத்துதான் படம் எடுக்கமுடியுமா..? நம்ம ஊர் 'ஆட்டுக்கார அலமேலு' மாதிரி 'ஆட்டை வைத்து படம் எடுக்க முடியாதா?.. முடியும் என ஆட்டை வைத்து மலையாளத்தில் ஒரு படம் எடுத்திருக்கிறார்கள் ஜெயசூர்யா ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தின் பெயர் என்ன தெரியுமா.? 'ஆடு ஒரு பீகர ஜீவியானு'.. அதாவது 'ஆடு ஒரு பயங்கர மிருகம்' என்று அர்த்தமாம்..
ஆனால் அப்படியெல்லாம் இல்லாமல், ஒரு ஆடு, அதுவும் சொன்னபடி கேட்டு நடக்கிற சண்டித்தனம் பண்ணாத பெண் ஆடு ஒன்று இந்தப்படத்தில் நடித்திருக்கிறது.. காமெடி படமாக உருவகியுள்ள இந்தப்படத்தில், ஆட்டுக்கு கிட்டத்தட்ட கதாநாயகிக்கு இணையான வேடமாம். வரும் பிப்-6ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக இருக்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் மெகாஸ்டார் மம்முட்டி கலந்துகொண்டார்.. அப்போது 'எங்கேப்பா டைட்டில் ரோலில் நடித்திருக்கும் அந்த ஜீவன்?” என விழாவில் அந்த ஆட்டை காணோமே என கேட்டு ஜாலியாக கலாட்டா செய்தார்.. அனைவரும் கலந்துகொண்ட அந்த விழாவில் அந்த ஆடு மட்டும் கலந்துகொள்ளவில்லை.. இதே தமிழில் உருவான 'நாய்கள் ஜாக்கிரதை' படத்தில் அந்தப்படத்தின் பிரஸ்மீட் நடந்தபோது அந்தப்படத்தில் நடித்த நாய்க்கும் ஒரு நாற்காலி போட்டு அமரவைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..