ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சுப்பிரமணியபுரம் படத்தில் வில்லனாக நடித்து பேசப்பட்ட டைரக்டர் சமுத்திரகனி அதன்பிறகு ஈசன், சாட்டை, வேலையில்லா பட்டதாரி, காடு என பல படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்தார். அடுத்தபடியாக அவரது நடிப்பில் நீயெல்லாம் நல்லா வருவடா, சண்டமாருதம், மாஸ், ஆதார், ரஜினிமுருகன் என பல படங்கள் வெளியாக தயாராகிக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், அடுத்தபடியாக கிட்னா படத்தை இயக்கி நடித்து வருபவர், ராவா என்றொரு படத்திலும் நடிக்கிறார். இப்படத்தில் முழுக்க முழுக்க சமுத்திரகனியின் கதாபாத்திரத்தை முன்வைத்துதான் கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம். அதனால் அவரது கேரக்டருக்கு ஒரு ஜோடி நடிகையை வைக்கலாமா என்று யோசித்து வந்தார்களாம்.
ஆனால், விசயம் சமுத்திரகனியின் காதுக்கு வந்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாராம். காரணம், எடுத்துக்கொள்ளும் கதைக்கு என்ன தேவையோ அதைத்தான் செய்ய வேண்டும். மாறாக, எனக்கொரு ஜோடி நடிகையை வைத்து ஒரு டூயட்டை கதைக்குள் திணித்தால் அந்த கதை கெட்டுப்போய் விடும். மேலும் எனக்கும் அந்த மாதிரி நடிப்பதில விருப்பமில்லை. எப்போதுமே நான் நடிகன்தான். நாயகன் இல்லை. அதனால் எனக்கு பிடிக்கும் பாதையில் பயணிக்கவே விரும்புகிறேன் என்று சொல்லி ஜோடி நடிகையை இணைக்கும் முயற்சிக்கு தடை போட்டு விட்டாராம் சமுததிரகனி.