ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழ், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷாவுக்கும், தயாரிப்பாளரும் தொழிலதிபருமான வருண் மணியனுக்கும் கடந்த வாரம் சென்னையில் அவர்களது குடும்பத்தினரும், நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்ட திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதற்கு மறுநாள் நடைபெற்ற பார்ட்டியில் எண்ணற்ற திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். திருமணத்திற்கு முன்பே நடிக்க ஒத்துக் கொண்ட படங்களின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில் இருப்பதால் தற்போது அவற்றில் கலந்து கொண்டு த்ரிஷா நடித்து வருகிறார்.
தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக முதன் முறை நடிக்கும் 'லயன்' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அப்படத்தின் படப்பிடிப்பில் த்ரிஷா இப்போது நடித்து வருகிறார். தெலுங்கிலும், தமிழிலும் த்ரிஷாவுக்கு வேறு எந்த புதுப்படங்களும் ஒப்பந்தமாகவில்லை. முன்னர் ஒப்பந்தமான படங்களில் மட்டுமே தற்போது நடித்து வருகிறார். தமிழில் ஜெயம் ரவியுடன் 'அப்பா டக்கர்' படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திருமணத்திற்குப் பின் நடிப்பேன் என த்ரிஷா சொன்னாலும், அவர் நடிப்பை விட்டு விலகி விடுவார் என்றுதான் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு ஹீரோயினுக்கு திருமணமாகிவிட்டாலே திரையுலகினரும் தொடர்ந்து அவர்களை நாயகியாக நடிக்க வைக்கத் தயங்குவார்கள். த்ரிஷா விஷயத்தில் அது எப்படி நடக்கப் போகிறது என்பது போகப்போகத்தான் தெரியும்.