ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகர் அஜித்குமார் உயிருக்கு ஆபத்து இருப்பதாக, மிரட்டல் கடிதம் வந்துள்ளதால், போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொங்கல் வெளியீடு:
நடிகர் அஜித்குமார் - திரிஷா, அனுஷ்கா நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி இருக்கும், என்னை அறிந்தால் திரைப்படம் பொங்கலுக்கு வெளிவருவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அந்தபடம் வெளி வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தநிலையில், அந்த படம், வரும், 5ம் தேதி, திரைக்கு வருகிறது. சென்னை, அசோக் நகரில் உள்ள, உதயம் தியேட்டர் உட்பட பல்வேறு தியேட்டர்களில் திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம், உதயம் தியேட்டருக்கு, மர்ம கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதம் குறித்து, குமரன் நகர் போலீசில், தியேட்டர் மேலாளர் அரிகரன் புகார் அளித்தார்.
அந்த மர்ம கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பது பற்றி போலீசார் கூறியதாவது: அஜித் - திரிஷா நடித்துள்ள, என்னை அறிந்தால் திரைப்படம், வரும், 5ம் தேதி திரையிட முடிவு செய்துள்ளனர். அன்றைய தினம், உதயம் உட்பட, எட்டு தியேட்டர்களில் வெடிகுண்டு வெடிக்கும்; முடிந்தால் தடுத்து பாருங்கள் என, எழுதப்பட்டுள்ளது. அதுபோல், நடிகர் அஜித் உயிருக்கும் ஆபத்து உள்ளது. எழுதியவர், திருவான்மியூர் அஜித் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடிதம் அனுப்பியவரை தேடி வருகிறோம். இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.
பின்னணியில் யார்?
மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து, உதயம் உட்பட பல்வேறு தியேட்டர்களில், நேற்று, மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. எனினும், இந்த கடிதம் எங்கு இருந்து வந்துள்ளது; அனுப்பியவர் யார், எதற்காக திடீரென இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளது; அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் இதேப்போன்று அஜித்திற்கு கொலை மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.