ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜெர்மன் கலாச்சாரத்துறை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. ஜெர்மன் நாட்டு கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பரப்புவது இதன் வேலை. தற்போது இந்த அமைப்பு ஜெர்மனியில் இருந்து 25 ஓவியர்களை வரவழைத்து சென்னையில் உள்ள சுவர்களில் ஓவியங்களை வரைந்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக சென்னை சத்யம் தியேட்டர் சுவரில் சினிமா தொடர்புடைய ஓவியங்களை வரைந்து வருகிறது.
அதோடு சென்னை ஜெர்மன் கலாச்சாரத்துறை தமிழ்நாட்டில் உள்ள பழமையான தியேட்டர்களை புகைப்படம் எடுத்து அதனை பாதுகாத்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்த ஜெர்மன் புகைப்பட கலைஞர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளின் வடிவமைப்பு மிகவும் கவர்ந்திருக்கிறது. அப்போது அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வித்தியாசமான கட்டிட அமைப்புகள் கொண்ட 30 தியேட்டர்களை புகைப்படம் எடுத்தனர். இந்த படங்களை இப்போது ஜெர்மன் கலாச்சரத்துறை கண்காட்சியாக வைத்துள்ளது.