ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கொம்பன் படத்தையடுத்து காஷ்மோரா படவேலைகளில் இறங்கி விட்டார் பருத்தி வீரன் கார்த்தி. இந்த நிலையில் மெட்ராஸ் படத்தின் ஹிட்டுக்குப்பிறகு அவரை வைத்து படம் இயக்க புது வரவு டைரக்டர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். அதனால் அவரை தற்போது ஓரிரு படங்கள் இயக்கியவர்கள் முற்றுகையிட்டு வருகின்றனர். அதனால் அவரது கதை இலாகா கதை கேட்பதில் முன்பைவிட தீவிரமடைந்துள்ளது.
அப்படி செல்பவர்களிடம் வழக்கம்போல் முதலில் கார்த்தி கதை கேட்பதில்லை. கதை கேட்பதற்கென்றே அவர் வைத்திருக்கும் கதை இலாகாதான் கதை கேட்கிறார்கள். அப்படி அவர்கள் ஒரு நாளைக்கு ஒரு கதை வீதம் கேட்கிறார்களாம். ஒரேநாளில் பல கதைகள் கேட்டால் சரியான முடிவு எடுக்க முடியாது என்பதால் இதை பின்பற்றுகிறார்களாம். இவர்கள் ஓகே என்று தேர்வு செய்யும் கதையை கடைசியில் அனைவரும் உட்கார்ந்து ஒருமுறை கேட்கிறார்களாம். அப்போதும் அது திருப்தியாக இருக்கும்பட்சத்தில் அந்த கதையை டிக் அடித்து கார்த்தி பாசறைக்குள் அனுப்பி வைக்கிறார்களாம்.