ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
காந்த குரலோன் கே.ஜே.யேசுதாஸ் சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதையொட்டி அவரை கவுரவிக்கும் வகையில் பாராட்டு விழா மற்றும் இசை நிகழ்ச்சி சென்னையில், நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று(ஜன., 25ம் தேதி) விமரிசையாக நடந்தது. இதில் யேசுதாஸ் பாடிய சிறந்த பாடல்களை யேசுதாஸ், அவரது மகன் விஜய் யேசுதாஸ், பி.சுசீலா, சைலஜா, ஹரிஹரன், ஹரிச்சரண் உள்ளிட்ட பலர் பாடினர்.
நிகழ்ச்சியில் யேசுதாஸ் பேசுகையில், பாடகர்கள் அதிகம் பேசக்கூடாது, பாட்டோடு நிறுத்தி கொள்ள வேண்டும். அதுதான் அவர்களுக்கு நல்லது. ஒவ்வொரு அரிசியிலும் ஒருவரது பெயர் எழுதப்பட்டிருக்கும் என்பார்கள், அதுபோல் ஒவ்வொருத்தருக்கும் இந்தப்பாட்டு பாட வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கும். அந்தப்பாட்டு நமக்கு கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட கூடாது. நான் ஒருபோதும் வருத்தப்பட்டது கிடையாது. மேலும் என்னை நான் ஒரு வித்வானாக ஒருநாளும் நினைத்ததில்லை, இன்றும் நான் கற்றுக்கொண்டிருக்கும் ஒரு மாணவனாகத்தான் இருக்கிறேன் என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், நடிகைகள் சரோஜாதேவி, சுஹாசினி, அம்பிகா, ரேவதி, ராதிகா, பூர்ணிமா, பாக்யராஜ், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், எஸ்.பி.முத்துராமன், நரேன், பார்த்திபன், ஒய்.ஜி.மகேந்திரன், பரத்வாஜ் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்ட யேசுதாஸை வாழ்த்தினர்.