மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
திரைப்பட நட்சத்திரங்கள் என்றாலே சினிமாவைத் தவிர வேறு எதைப் பற்றியும் கருத்துக்களைச் சொல்ல மாட்டார்கள். ஆனால், ஒரு சிலர் நாட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களைப் பற்றியும் ஏதாவது ஒரு கருத்தைச் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நடிகை சமந்தா. சற்று முன் அவர் பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்து ஒரு டிவீட் செய்துள்ளார். இதற்கு முன்னும் சமந்தா பல சமயங்களில் அவருடைய கருத்துக்களை வெளிப்படையாகச் சொன்னதுண்டு.
“அனைத்து மக்களுக்கும் என்னுடைய குடியரசு தின வாழ்த்துகள். அமைதி, முன்னேற்றம், வளமையும் உண்டாகட்டும். இந்தியராக இருக்கப் பெருமை. அதிபர் ஒபாமா இங்கே வந்திருப்பது அரசியலுக்கு மிகச் சிறந்த விஷயமாகும். வளர்ச்சிக்கு ஒரு அடையாளமாகவும் திகழ்கிறது. மோடியைப் புகழ்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமந்தாவின் இந்தக் கருத்து விமர்சிக்கப்பட வாய்ப்பிருந்தாலும், தான் சொல்ல நினைப்பதை, தன்னுடைய கருத்தை வெளிப்படையாகச் சொல்லி வருபவர் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவை விட்டு விலகிய பின் ஒரு வேளை அரசியலில் ஈடுபடுவாரோ....?