ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மான் கராத்தே படத்திற்கு பிறகு கதைக்கு இணையாக கதாநாயகி விசயத்திலும் கவனம் செலுத்த தொடங்கினார் சிவகார்த்திகேயன். தற்போது காக்கி சட்டையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் தன்னுடன் நடித்த ஸ்ரீதிவ்யாவுடன் மீண்டும் இணைந்திருப்பவர், அடுத்து ரஜினி முருகனில் கீர்த்தி சுரேஷூடன் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தநிலையில், ஹன்சிகாவுடன் நடித்து விட்ட அவர் காக்கி சட்டையில் நயன்தாராவுடன் நடிப்பதாக இருந்தது. ஆனால், கதை சொல்லி ஓகே பண்ணி விட்டபோதும், சம்பள விசயத்தில் நயன்தாரா எகிறி பேசியதால். அந்த படததில் அவருக்கு பதிலாக ஸ்ரீதிவ்யா கமிட்டானார். ஆக, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்டது. இருப்பினும், நயன்தாராவுடன் டூயட் பாடியே தீருவது என்கிற அவரது ஆர்வம் இன்னும் குறைந்தபாடில்லை. அதனால், அடுத்தபடியாக தான் சில மெகா படங்களில் நடிக்க இருப்பதால் அந்த படங்களில் அவருடன் ஜோடி சேர்ந்து விடுவது என்ற முடிவில் இருக்கும் சிவகார்த்திகேயன், சம்பந்தப்பட்ட டைரக்டர்களிடமும் நயன்தாராவிடம் கால்சீட் பேசி வைக்குமாறும் கூறியுள்ளாராம்.