ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
படம் முழுக்க ஒருவர் மட்டுமே நடித்து தயாராகியுள்ள படம் யாருக்காக. இந்த படத்தில் புதுமுக நடிகர் வெங்கி நாயகனாக நடித்திருக்கிறார். எம.கே. சாமி இயக்கியுள்ளார். அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கான உரிமைகளுக்கு போராடும் ஒரு தலைவனின் போராட்டத்தை மையமாகக்கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் நடித்துள்ள வெங்கி யாருக்காக படம் பற்றி கூறுகையில், நான் 15 ஆண்டுகளாக வழக்கறிஞராக இருக்கிறேன். ஹவுசிங்போர்டு சேர்மன். அதனால் சமுதாய சேவை எண்ணம் எனக்குள் ஊறி விட்டது. அதனால் அவ்வப்போது என்னால் ஆன உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறேன். இந்த நேரத்தில்தான் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கான உரிமை பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் வகையில் ஒரு படம் எடுக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. சினிமா மாஸ் மீடியா என்பதால் இதை தேர்ந்தெடுத்தேன். என்னுடைய கருத்துக்களை மக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதனால் உணர்வுகள் வெளிப்பட வேண்டும்..மேலும், உரிமைகளை கேட்டு பெறக்கூடாது. அது தானாக கிடைக்க வேண்டும் என்பதே எனது வாதம். அந்த வகையில் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கான கதையில் இந்த யாருக்காக படம் உருவாகியிருக்கிறது.
மேல்தட்டு மக்கள், கீழ்த்தட்டு மக்களுக்கு உரிமைகளை கொடுக்க மறுக்கிறார்கள். அதை தட்டிக்கேட்பவனை தீவிரவாதி என்கிறான். எனது கேள்வி என்னவென்றால், உரிமையை கொடுப்பதை தடுக்கிறவன் தீவிரவாதியா? இல்லை உரிமையை கேட்க போராடுபவன் தீவிரவாதியா? என்பதுதான். அந்த வகையில் நான் தீவிரவாதி அல்ல. எனக்கான உரிமையை கேட்கும் போராளி. இந்த போராளியை தீவிரவாதி என்று உரிமையை தடுப்பவன் சொல்கிறான். நான் தீவிரவாதி அல்ல, ஒரு வாதத்தில் தீவிரமாக இருக்கிறேன்.மேல்தட்டு மக்களால் தீவிரவாதி என்று திணிக்கப்பட்டவன். இந்த கருத்தை நான் மக்களுக்கு சொல்ல வேண்டும். அதற்காகத்தான் நான் ஒருவனே நடிக்கும் இந்த யாருக்காக படத்தை தயாரித்து நடித்திருக்கிறேன்.
இந்த படததின் ஹீரோவைப்பொறுத்தவரை இது அவனுக்கு தேவையில்லாத விசயம்தான். ஆனால் அடித்தட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக தன்னைத்தானே வருத்திக்கொள்கிற பிரம்மன் என்கிற கதாபாத்திரம். தர்மபுரி மாவட்டத்தில் வார்டு கவுன்சிலராக இருக்கும் எனது மனைவி மமதா வெங்கடாசலம் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். வெங்கி என்ற பெயரில் நான் இந்த படத்தில் நடித்திருக்கிறேன்.
மேலும், தமிழ் நாட்டில் உள்ள 7 கோடி பேரில் நல்ல படங்களை பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் மட்டும் இந்த படத்தை பார்த்தால் போதும். நான் சொல்ல வரும் விசயங்களை அவர்கள் புரிந்து விழிப்படைந்தால் போதும் என்பதே எனது நோக்கம். தானாக கிடைக்கிறதை தடுக்கிறவனை நாம் ஒற்றுமையாக இருந்து போராடி ஜெயிக்கணும் என்பதைத்தான் இந்த படத்தில் சொல்ல வருகிறேன. மாட்டுக்கார மன்னாரு படத்தில் தேவாவை இசையமைப்பாளராக அறிமுகம் செய்த தென்றல் தியாகராஜன் என்பவர்தான் எம்.கே. சாமி என்ற பெயரில் இந்த படத்தை இயக்கியுள்ளார். அவரே என்னையும் அறிமுகம் செய்வதில் பெருமைப்படுகிறேன் என்கிறார்.
அவரிடத்தில், இந்த படத்தில் நீங்கள் நடித்துள்ள பிரம்மன் கேரக்டர் பிரபாகரனை நினைவுபடுத்துவது போல் உள்ளதே? என்று கேட்டால், எந்த மனிதர்களாக இருந்தாலும் அவர்கள் எங்கு பிறந்தார்களோ அந்த மண்ணுக்கு சொந்தமானவர்கள்தான். தங்களுக்கு வரவேண்டிய உரிமைகள் கிடைக்காதபட்சத்தில் அவர்கள் போராடுகிறார்கள். அதேபோல் , இந்த படமும் ஒரு போராளியின் கதைதான். ஆனால் பிரபாகரனின் கதை அல்ல. மேலும் இந்த படத்தின் கதாநாயகன் ஆயுதம் ஏந்தி போராட சொல்லவில்லை. அகிம்சை வழியில்தான் போராட வலியுறுத்துகிறான் என்று கூறும் வெங்கி, இந்த படத்தின் ஓப்பனிங்கில் இருந்து என்ட் கார்டு போடும் வரை நான் மட்டுமே நடித்திருந்தபோதும், ஒரு நான்கு குரல்கள் அவ்வப்போது ஒலிக்கும். அதில் எனது காதலியின் குரல்.எனக்கு நண்பராக இருந்து எதியான குணா கேரக்டரின் குரல்,. அடுத்து காட்டில் இருக்கும் ஒரு விநாயகர் சிலையும் அவ்வப்போது என்னுடன் பேசும். அடுத்து, கதையை தொகுத்து சொலலிக்கொண்டு வருபவரின் வாய்ஸ் என நான்கு குரல்கள் படத்தில் ஒலிக்கும்.
இந்த படத்துக்காக 100 அடி ஆழமுள்ள கல்குவாரியில் ரோப்பே இல்லாமல் குதித்து நடித்தேன். அது ரியலாக வந்திருக்கிறது. அதோடு, கதாபாத்திரத்துக்காக 70 கிலோ எடையில் இருநது 80 கிலோவாக அதிகப்படுத்தி நடித்தேன் என்கிறார்.