ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு இன்று தேர்தல் நடக்கிறது. இரண்டு ஆண்டுகள் சங்கத்தை நடத்தும் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இது. வெளி உலகத்துக்கு தெரியாமல் நடந்து வந்த இந்த தேர்தல் தயாரிப்பாளர்களிடையே உருவான ஈகோ மோதல், அரசியல் நுழைவு இவற்றால் பரபரப்பான பொது தேர்தல்போல நடக்க ஆரம்பித்து விட்டது.
இந்த முறை தேர்தலை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தேர்தல் அதிகாரியாகவும், பார்வையாளராகவும் இருந்து தேர்தலை நடத்துகிறார். இதில் தலைவர் பதவிக்கு கலைப்புலி எஸ்.தாணுவுக்கும், ஏ.எல்.அழகப்பனுக்கும் இடையே போட்டி. இவர்கள் இருவரையும் தவிர மன்சூரலிகான், ராஜேந்திரன், ஹென்றி ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். தலைவருக்கு அடுத்து சக்தி வாய்ந்த பதவியான கவுரவ செயலாளர் பதவிக்கு தாணு அணியை சேர்ந்த டி.சிவாவும், ராதாகிருஷ்ணனும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர்.
துணை தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. தாணு அணியிலிருந்து பி.எல்.தேனப்பனும், சீனிவாசனும் போட்டியிடுகிறார்கள். அழகப்பன் அணியிலிருந்து கே.ராஜன் போட்டியிடுகிறார். இவர்கள் தவிர பைவ் ஸ்டார் கதிரேசன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். பொருளாளர் பதவிக்கு தாணு அணி சார்பில் சத்யஜோதி தியாகராஜனும், சுயேட்சையாக வெங்கடேசும் போட்டியிடுகிறார்கள். 21 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 74 பேர் போட்டியிடுகிறார்கள். போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள் தவிர மொத்தத்தில் 25 பதவிகளுக்கு 85 பேர் போட்டியிடுகிறார்கள்.
தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ள உறுப்பினர்கள் 967 பேர். இவர்களில் 50 சதவிகிதத்தினர் வெளியூர்களில் உள்ளனர். அவர்கள் நேற்று இரவே சென்னை வந்து தங்கி உள்ளனர். போட்டியிடும் ஒவ்வொரு அணியினரும் வாக்குறுதிகளை அள்ளி வீசி வாக்கு கேட்டனர்.