அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
சின்னத்திரையில் இடம்பெற்ற நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமான சதீஷ், கௌதம் மேனனின், ''வாரணம் ஆயிரம்'' படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்தார். பின்னர் டான்ஸ் மாஸ்டராகவும் மாறினர். இப்போது அஜீத், கௌம் கூட்டணியில் உருவாகியுள்ள என்னை அறிந்தால் படத்தில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். சதீஷ்க்கு பிறந்தநாள். இந்தாண்டு அவருக்கு, இந்த பிறந்தநாள் ரொம்பவே விஷேசம் என்கிறார்.
அப்படி என்ன விஷேசமாம்.? அவரே சொல்கிறார்...
“ 'வாரணம் ஆயிரம்' படத்தில் நடித்ததன் மூலம் தான் கௌதம் சாரை தெரியும், பின் 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் நடனம் அமைத்து கொடுத்தேன். அவருக்கும் எனக்கும் ரசனை பல இடங்களில் ஒத்து போய் இருக்கிறது. இதுவே எனக்கு 'என்னை அறிந்தால்...' கிடைத்த ரகசியம். இவ்வளவு பெரிய படம் அப்படின்னு ஒரு பயம் உள்ளுர இருந்தது. உன்னால் பண்ண முடியும் என்று கௌதம் சார் ஊக்கம் அளித்தார்.
அஜித் சாருடன், “ 'ஆதாரு... ஆதாரு...' பாட்டு எல்லோரும் நினைப்பது போல ஒரு ஃப்ரெண்ட்ஷிப் பாட்டா மட்டும் இருக்காது. நான் அறிந்தவரை 'வேற லெவல்' நடனமாய் இருக்கும். நான் எனக்கு வரும் நடன அசைவுகள் என்றும், நடிகருக்கு ஏற்றார் போல் நடன அசைவுகளை 'பிளான் எ', 'பிளான் பி' என்று வைத்திருப்பேன். வழக்கம்போல அஜித் சாரிடம் சென்று நான் பாட்டின் அசைவுகளை எடுத்து கூறிக் கொண்டே இருந்தேன். இடையில் நிறுத்தி இதுக்கு நீங்க ஒரிஜினலா என்ன ஐடியா வெச்சிருந்திங்க அத சொல்லுங்க என்றார். நான் மலைத்து போனேன். நான் நினைத்ததை அப்படியே திரையில் கொண்டு வந்து நிறுத்தினார். “ 'மழை வரபோகுதே' பாடலை பார்க்கும் பொழுது நான் நடனம் அமைத்த பாடலா என்று எனக்கே ஆச்சர்யமாய் இருந்தது.
இந்த பிறந்தநாள் எனக்கு முக்கியமானது. தணிக்கை குழுவினர் 'என்னை அறிந்தால்...' படத்தை பார்த்து பாராட்டியுள்ளனர். அஜீத் சார் ரசிகர்களுக்கு மட்டுமின்றி எல்லா தரப்பு ரசிகர்களையும் நிச்சயம் கவரும் படமாக இருக்கும் என்ற எங்களதுக் கணிப்பு தப்பவில்லை. நான் எங்கு சென்றாலும் அஜீத் சாரின் ரசிகர்கள் படத்தைப் பற்றியும், படம் எப்போது வெளியாகும் என்று கேட்கும்போது தான் நாம் எவ்வளவு பெரிய படம் பண்ணி இருக்கும்னு தெரியுது. படம் பிப்ரவரி 5 ஆம் தேதி வெளி வரும் போது, அஜீத் சாரின் ரசிகர்களுடன் நள்ளிரவு முதல் காட்சிக்கு சென்று குத்தாட்டம் போடப்போவதை நினைத்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
இவ்வாறு சதீஷ் கூறியுள்ளார்.