ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எதிரும் புதிரும் படத்தில் இயக்குனரானவர் பேரரசு. அந்த படத்தில் டாக்டராக நடித்தவர், அதன்பிறகு விஜயகாந்தை வைத்து இயக்கிய அரசாட்சி படத்தில் நிருபராக நடித்தார். பின்னர், திருப்பாச்சி, சிவகாசி, தர்மபுரி, பழனி, திருவண்ணாமலை, திருத்தணி என தான் இயக்கிய பல படங்களிலும் ஏதாவது ஒரு கேரக்ட்ரில் முகம் காட்டி வந்தார் பேரரசு.
இந்த நிலையில், திகார் என்ற படத்தை தமிழ், மலையாளத்தில் இயக்கியிருக்கும் அவர், தற்போது அப்படத்தை வெளியிட சரியான நேரத்தை எதிர்பார்த்திருக்கிறார். இந்த நேரத்தில், சுண்டாட்டம், பொங்கி எழு மனோகரா படங்களில் நடித்துள்ள இர்பான் நாயகனாக நடித்திருக்கும் ரு என்ற படத்தில் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார் பேரரசு.
அப்படத்தில் அவர் சிறிது நேரமே வந்தாலும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடமாம். ஆனால் அந்த படத்தில் அவர் எந்த மாதிரியான வேடத்தில் நடிக்கிறார் என்பதை தற்போதைக்கு சஸ்பென்சாக வைத்திருப்பவர்கள். அவர் நடித்திருப்பதைகூட வெளியில் சொல்லாமல் வைத்திருக்கிறார்கள். மேலும், இதுவரை தான் இயக்கிய படங்களில் மட்டுமே நடித்து வந்த பேரரசு, இப்போது மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கியிருப்பவர், இனிமேல் நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் நடிக்கத் தயாராக உள்ளாராம். இதை தான் சந்திக்கும் டைரக்டர்களிடம் கூறி வருகிறார் அவர்.