ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சந்தானம், சிவகார்த்திகேயன் இருவரும் சின்னத்திரையிலிருந்து...குறிப்பாக விஜய் டிவியின் மூலம் சினிமாவுக்கு வந்தவர்கள். அதனாலோ என்னவோ சந்தானம், சிவகார்த்திகேயன் இருவருக்கும் இடையில் ஆரம்பகாலத்திலிருந்தே சத்தமில்லாமல் ஒரு ஈகோ யுத்தம் நடைபெற்றுக்கெண்டிருக்கிறது. வெளியே தெரியாமல் புகைந்து கொண்டிருக்கும் இந்த ஈகோ மோதல் காரணமாக இருவரும் எக்காரணம் கொண்டும் சேர்ந்த நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.
இந்நிலையில் சந்தானம், சிவகார்த்திகேயன் இருவரையும் இணைந்து நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார் சுந்தர்.சி. வடிவேலு ஓய்ந்துபோன பிறகு, சமீபகாலமாக தன் படங்களில் கண்டிப்பாக சந்தானத்திற்கு முக்கிய கதாபாத்திரத்தை கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் சுந்தர்.சி. கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனையைத் தொடர்ந்து பொங்கலுக்கு வெளியான ஆம்பள படத்திலும் சந்தானத்திற்கு முக்கிய வேடம் கொடுத்திருந்தார். சந்தானத்தின் காமெடிக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், சுந்தர்.சி இயக்கவிருக்கும் அடுத்த படத்திலும் சந்தானத்திற்கு முக்கிய கதாபாத்திரத்தைக் கொடுக்கவிருக்கிறார். ஆம்பள படத்திற்குப் பிறகு சுந்தர்.சி இயக்கப்போகும் படம் எது? தன் அடுத்தப் படம் குறித்து இரண்டுவித சிந்தனைகளிலிருக்கிறாராம் சுந்தர்.சி. ஒன்று... அரண்மனை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவது.
இன்னொன்று.. 1996 ல் வெளிவந்து சூப்பர்ஹிட்டான உள்ளத்தை அள்ளித்தா படத்தை ரீமேக் செய்வது.
ஏற்கெனவே சிவகார்த்திகேயனிடம் சுந்தர்.சியின் மனைவியும், நடிகையுமான குஷ்பு கால்ஷீட் வாங்கி வைத்திருக்கிறார். இதனால் உள்ளத்தை அள்ளித்தாவில் கார்த்திக் நடித்த கேரக்டரில் சிவகார்த்திகேயனையும், கவுண்டமணி கேரக்டரில் சந்தானத்தையும் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார் சுந்தர்.சி. ஒருவேளை இந்த ப்ராஜக்ட் திட்டமிட்டபடி வொர்க்அவுட்டாவில்லை என்றால், அரண்மனை படத்தின் 2ம் பாகத்தில் சிவகார்த்திகேயனையும், சந்தானத்தையும் சேர்த்து வைத்து இயக்கலாமா எனயோசித்து வருகிறார் சுந்தர்.சி.