வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
ஹிட்..ஹிட்..ஹிட்.. இதுதான் மலையாள இயக்குனர் அன்வர் ரஷீத்தின் தாரக மந்திரம்.. ஓர் அறிமுக இயக்குனராக 2௦௦5ல் மம்முட்டியை வைத்து இவர் இயக்கிய 'ராஜமாணிக்கம்' என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் மற்ற முன்னணி நடிகர்களையும், ஏன் இயக்குனர்களையும் கூட வாய்பிளக்க வைத்தது. இன்றும் கூட விஷேச தினங்களில் மற்ற மலையாள சேனல்களில் எத்தனை புதுப்படங்களை ஒளிபரப்பினாலும், ஒரு குறிப்பிட்ட சேனல் மட்டும் நம்ம ஊரில் 'பாட்ஷா'வை களம் இறக்குவது மாதிரி அங்கே 'ராஜமாணிக்கம்' படத்தை தான் ஒன்மேன் ஆர்மியாக களம் இறக்கிவருகிறது.
தொடர்ந்து மோகன்லாலை வைத்து 'சோட்டா மும்பை', மீண்டும் மம்முட்டியை வைத்து 'அண்ணன் தம்பி', அவரது மகன் துல்கர் சல்மானை வைத்து 'உஸ்தாத் ஹோட்டல்' என குறைந்த அளவு படங்களை இயக்கினாலும் தனது படங்களால் அதிகம் பேசப்படுபவர் அன்வர் ரஷீத். கடந்த வருடம் மலையாள ரசிகர்களை கிறங்கடித்த 'பெங்களூரு டேய்ஸ்' இவரது தயாரிப்பு என்பதும், அதை இயக்கிய அஞ்சலி மேனன் இவரது சிஷ்யை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சரி.. அன்வர் புராணம் போதும்.. விஷயத்துக்கு வருவோம்... இந்த அன்வரின் படத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார் மோகன்லால். ஏற்கனவே 'சோட்டா மும்பை' படம் மூலம் மோகன்லாலின் ஒரு புதிய அவதாரத்தை காட்டியிருந்தார் அன்வர் ரஷீத். இந்தப்படமும் இருவரது கூட்டணியின் வெற்றியை மீண்டும் நிலைநாட்டும் என்று இப்போதே பாக்ஸ் ஆபீஸில் ஆருடம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.