ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நயன்தாரா வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்த படங்களாக ஸ்ரீராமராஜ்ஜியம், அனாமிகா போன்ற படங்களை விரல்விடடு எண்ணி விடலாம். இதற்கு அவர் 12 வருடங்கள் கடந்து வந்திருக்கிறார். ஆனால் இனிமேல் கொண்டு தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களுமே சிறந்த படங்களாக இருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தற்போது புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார் நயன்தாரா. அந்த வகையில், ஜெயம்ரவியுடன் நடித்து வரும் தனி ஒருவன் படத்தில் ஆக்சன் ஹீரோயினியாக நடித்துள்ளார் நயன்தாரா. சண்டை காட்சிகளில் நடிக்க முன்கூட்டியே பயிற்சியெல்லாம் எடுத்து வில்லன்களை பின்னி எடுத்திருக்கிறார் நயன். இந்த நிலையில், தற்போது அவர் விஜயசேதுபதியுடன் நடித்து வரும் நானும் ரெளடிதான் படத்தில் காது கேளாத பெண்ணாக நடிக்கிறார் அவர்.
ஒரு கட்டத்தில் அவரை வில்லன்களை கடத்திச்சென்று விடுவார்களாம். அதையடுத்து, அவரது காதலரான விஜயசேதுபதி, நயன்தாராவை காப்பாற்ற களமிறங்குவாராம். ஆனால், அதற்கு இடைபட்ட நேரத்தில் வில்லன்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் நயன்தாரா, அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக அவர்களுடன் ஆவேசமாக மோதுவாராம். அந்த சண்டைக்காட்சி விரைவில் படமாக்கப்பட உள்ளதாம்.