ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்திய அளவில் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் முதன்முதலாக தயாரான படம் ஐ. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்த இந்த படத்தில் விக்ரம்- எமிஜாக்சன் நடித்தனர். பொங்கலுக்கு வெளியான அப்படத்தில் தான் பணியாற்றிய அனுபவங்களை இப்போது வெளிப்படையாக பேசி வருகிறார் விக்ரம்.
அதுபற்றி அவர் கூறும்போது, ஐ படத்திற்கு முன்பு நான் நடித்த சில படங்கள் தோல்வியடைந்ததோடு, சில படங்கள் படப்பிடிப்பு நடைபெறாமல் பிரச்சினையில் இருந்தது. அப்போதுதான் ஷங்கர் என்னை அழைத்தார். அதோடு, 2 மாதங்களுக்கு முன்பே பாடியை ஒர்க்அவுட் பண்ண வேண்டும் என்றும், இனிமேல் இந்த படம் முடியும் வரை வேறு படங்களில் நடிக்கக்கூடாது என்றும் கூறினார்.
அதனால் தினமும் ஜிம்மிற்கு சென்று பாடி பில்டராக என்னை மாற்றி வந்தேன். மேலும், உடம்பை ஏற்றி இறக்க மாதக்கணக்கில் செலவு செய்தேன். அதோடு ஐ படப்பிடிப்பு நடைபெற்றபோது ஒவ்வொரு நாளும் 3 மணி நேரம் மட்டுமே தூங்கினேன். காரணம், சீனாவில் சில அற்புதமான லொகேஷன்களில் படப்பிடிப்பு நடந்தபோது, தினமும் அதிகாலை 3 மணிக்கே எழுந்து உடற்பயிற்சி செய்வேன. அதையடுத்து 5 மணிக்கு லொகேஷனுக்கு கிளம்புவோம். ரயிலில் 2 மணி நேரம் சென்று இறங்கி பின்னர், காரில் 2 மணி நேரம் செல்வோம். அதன்பிறகு கால்நடையாக 1 மணி நேரம் நடந்த பிறகே லொகேஷனை அடைவோம்.