மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
வல்லவன் என்ற படத்தில் சிம்புவுடன் இணைந்து ஒரு பத்து பதினைந்து நாட்கள்தான் நடித்திருப்பார் நயன்தாரா. அதற்குள் அவர்களுக்கிடையே காதல் தீ பற்றிக்கொண்டது. ஆனால், ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொள்வதற்கு முன்பே அவர்களுக்கிடையே மலர்ந்த அந்த காதல் குறுகிய காலத்திலேயே டமார் என்று வெடித்து சிதறியது.
அதன்பிறகு பிரபுதேவாவையும் காதல் கொண்டு அவரை விட்டு பிரிந்து வந்த நயன்தாரா, இப்போது தனது முதல் காதலர் சிம்புவுடன் இணைந்து இது நம்ம ஆளு படத்தில் நடித்துள்ளார். இந்த படமும் காதல் கதைதான். ஆனால் இது சிம்பு-நயன்தாராவின் காதல் கதை இல்லை என்று முதலில கூறி வந்தார் அப்பட டைரக்டர் பாண்டிராஜ்.
ஆனால்,. இப்போது விசாரித்தபோது, அப்படம் சிம்பு-நயன்தாராவின் நிஜ காதலை மையமாக வைத்துதான் தயாராகியிருப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் முதலில் காதலித்தது பின்னர் பிரிந்தது போன்று படமாக்கி அதையடுத்து அவர்கள் இணைவது போலவே கதை அமைந்திருக்கிறதாம். கதை கேட்டபோதே சிம்புவுடன் தான் கொண்ட நிஜ காதலைதான் படமாக்குகிறார்கள் என்பது நயன்தாராவுக்கும் புரிந்து விட்டதாம். அதனால், சிம்புவுடன் தனக்கு ஏற்பட்ட காதல் அனுபவங்களை அவரைப்போலவே தானும் நிஜ பீலிங்கை வெளிப்படுத்தி நடித்துள்ளாராம் நயன்தாரா.
ஆக, இது நம்ம ஆளு படம் இது நம்ம காதல் என்று சிம்பு- நயன்தாரா ஜோடி கோரசாக சொல்லிக்கொள்வது போன்று உருவாகியிருககிறது.