மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
இந்தியன், ரன், குஷி, பாய்ஸ், கில்லி என பல மெகா படங்களை தயாரித்தவர் ஏ.எம்.ரத்னம். ஆனால் கடைசியில் ஒரு இரண்டொரு படங்கள் அவருக்கு தோல்வியை கொடுத்ததால் பெரும் சரிவை சந்தித்தார். அந்த நேரத்தில் தனது தயாரிப்பில் நடித்த யாராவது முன்னணி ஹீரோக்கள் தனக்கு கைகொடுக்க மாட்டார்களா? என்று எதிர்பார்த்தார் ஏ.எம்.ரத்னம். ஆனால் யாருமே அவரை கண்டு கொள்ளவில்லை.
இந்த நேரம்தான், அஜீத்திடம் தனது நிலையை சொல்லி அவர் கால்சீட் கேட்டபோது ஆரம்பம் படத்தில் நடித்தார். அப்போதும் ஏ.எம்.ரத்னத்தின் கடன் தீரவில்லை என்பதால், மீண்டும் கால்சீட் தருகிறேன் என்று சொல்லி என்னை அறிந்தால் படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்த படத்தை கெளதம்மேனன் இயக்கியுள்ளார்.
இவரும் ஒரு நேரத்தில் அஜீத்தை வைத்து படம் இயக்க இருந்தவர்தான். பின்னர் அவர்களுக்கிடையே ஏற்பட்ட சலசலப்பின் காரணமாக அந்த படம் நடக்கவில்லை. இருப்பினும், இப்போது ஏ.எம்.ரத்னத்தைப்போலவே கெளதம்மேனனும் இக்கட்டான நிலையில் இருப்பதை அறிந்த அஜீத் அவருககும் கைகொடுத்துள்ளார்.