ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வில்லங்க படங்களுக்கு புகழ்பெற்ற சாமி மிருகம் படத்தில் நடித்த பத்மப்ரியாவை கன்னத்தில் அறைந்த சம்பவம் அப்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு வருடத்திற்கு அவர் படம் இயக்க கூடாது என்ற ரெட் கார்ட் போடப்பட்டது.
தற்போது சாமி கங்காரு என்ற படத்தை இயக்கி வருகிறார். இது அண்ணன் தங்கை பாசத்தை மையமாக கொண்ட கதை. இது சம்பந்தமாக சாமி கூறியதாவது: உயிர், மிருகம், சிந்துவெளி படங்கள் என் மனசுக்கு சரியென்று பட்ட கதை. ஆனால் அது மக்களுக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்ததும். அதற்கு ஏற்ற மாதிரி என்னை நான் மாற்றிக் கொண்டேன். மக்களுக்கு பிடிக்கிற மாதிரி படங்கள் கொடுப்பதுதான் ஒரு படைப்பாளியின் வேலை என்பதை புரிந்து கொண்டேன். இனி என்னிடமிருந்து கண்ணியமான படங்கள்தான் வரும். நல்ல கருத்துக்களை சொல்லும் படங்கள்தான் வரும்.
ஒரே ஒரு சம்பவத்தை வைத்துக் கொண்டு என்னை எடைபோடக்கூடாது. மிருகம் எனது இரண்டாவது படம். பெரிய பக்குவம் எதுவும் எனக்கு இல்லை. பத்மப்பரியா நல்ல அனுபவம் வாய்ந்த நடிகை என்றுதான் அவரை நடிக்க வைத்தேன். அவர் படத்துக்கு சரியான ஒத்துழைப்பு கொடுக்காமலும், சரியாக நடிக்காமல் போனதாலும் கோபப்பட்டு விட்டேன். அது தவறு என்பதை அன்றே உணர்ந்தும் விட்டேன். அந்த ஒன்றையே இப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அந்த சம்பவத்துக்கு பிறகுதான், அமலாபால், ஸ்ரீப்ரியங்கா, வர்ஷா என்னுடைய படத்தில் நடித்தார்கள். ஒரு நாளாவது அவர்களை கோபமாக பேசியிருப்பேனா? கண்ணியக்குறைவாக நடத்தியிருப்பேனே என்று அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். எனது படங்கள், எனது குணங்கள் எல்லாவற்றையும் மாற்றும் படமாக, புதிய சாமியாக என்னை காட்டுகிற படமாக கங்காரு அமையும். என்கிறார் சாமி.