14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
நடிகர் விஷாலின் ஆம்பள படத்திற்கு தடை விதிக்க கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை. நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இப்படத்தின் தலைப்பு எங்களுக்கு சொந்தமானது என, ஸ்ரீ சாய் சினி சர்கியூட் நிறுவனம், சென்னை நீதிமன்றத்தில், நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி ஜெயமங்களம் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர், சினிமா சங்கத்தில் பதிவு செய்ததாக தெரிவித்த ஆம்பள படத்தின் தலைப்பு பதிவு காலாவதி ஆகிவிட்டது. விஷால் பிலிம் பேக்டரி, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில், ஆம்பள பட தலைப்பை முறையாக பதிவு செய்துள்ளது, விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால், தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என்றார். ஆம்பள படம், திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளியாகிறது