ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்து மக்கள் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் கா.பாலா என்பவர் கும்பகோணம் இரண்டாவது மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நேற்று (ஜன 9) குஷ்புவுக்கு எதிராக ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஒரு வார இதழில் நடிகை குஷ்பு கழுத்தில் ருத்தராட்ச மாலையுடன் மாங்கல்யம் (தாலி) அணிந்துள்ள புகைப்படம் வெளிவந்தது. இது இந்து மக்களையும், இந்து தர்மத்தையும் இழிவுபடுத்தும் வகையிலும், அவமதிக்கும் வகையிலும் உள்ளது. எனவே குஷ்பு மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு வருகிற 13ந் தேதி விசாரணைக்கு வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு குஷ்பு ஒரு திரைப்பட விழாவில் சாமி சிலைகளுக்கு முன்பு செருப்பு அணிந்து கால் மேல் கால்போட்டு அமர்ந்திருந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.