சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
தமிழ் சினிமாவிற்கு டிசம்பர். 23-ம் தேதி, 2014-ம் ஆண்டு கறுப்பு நாள் என்றே சொல்லலாம். இயக்குநர் சிகரம் என்று அழைக்கப்படும் கே.பாலச்சந்தர், மண்ணை விட்டு விண்ணுலகை சென்றடைந்த நாள். பாலச்சந்தரின் மறைவையொட்டி தமிழ் சினிமா உலகமே அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. அவரின் மறைவு அழியாத சுவடுகளாக இருந்து வரும்வேளையில், அவரால் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று உலகமே சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் நடிகர் ரஜினிகாந்த், தனது குருநாதர் மறைவையொட்டி ஒரு வாரஇதழில் கண்ணீர் மல்க ஒரு கட்டுரை வரைந்துள்ளார். அதில் சொல்லிய விஷயங்கள் சிலவற்றை இங்கு தெரிவித்துள்ளோம்...
குழந்தையை போல் பார்த்ததும் கண்கலங்கிவிட்டேன்
பாலசந்தருக்கு உடல்நிலை சரியில்லை என்று அவரது உதவியாளரிடமிருந்து போன் வந்தது. உடனே டிரைவரிடம் சொல்லி வண்டியை மருத்துவமனைக்கு செல்ல சொன்னேன். வண்டியில் பயணித்தபோதெல்லாம் என் மனம் தடுமாற்றத்திலேயே இருந்தது. ஒருவழியாக மருத்துவமனைக்கு சென்று அவரை பார்த்தேன். எப்படி சார் இருக்கீங்க என்று கேட்டேன், ஒரு குழந்தையை போல் அவர் என்னை பார்த்ததும் கண்கலங்கிவிட்டேன்.
ரஜினி-னு அடையாளம் காட்டியவர்
என்னை ரஜினி என்று அடையாளம் காட்டிய அந்த ஆத்மா இன்று இப்படி இருப்பதை பார்த்து என் மனம் தடுமாறியது. எனக்கு பேச வார்த்தைகள் வரவில்லை மாறாக கண்ணீர் தான் என்னையும் அறியாமல் வந்தது. இரண்டொருநாளில் அவரது உடல்நலம் தேறியுள்ளதாக செய்தி வந்தது, அதை எண்ணி மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் அந்த மகிழ்ச்சி மறுநாள் கூட நீடிக்கவில்லை, அவரது மறைவு செய்தி வந்தது.
தவறான முடிவு எடுக்க இருந்தேன்
1980களில் சினிமாவே வேண்டாம், என்னை விட்டுவிடுங்கள் சார் என்று அவரிடம் நான் சொன்னபோது, என்னை பொறுமையாக இருடா, இன்னும் 6மாதம் பொறுத்திருந்து அதற்கு அப்புறம் முடிவெடுக்கலாம் என்று கூறினார். என் தவறான முடிவை அவர் மட்டும் தடுத்திருக்காவிட்டால், என்னுடைய இன்றைய முகவரி என்றோ தொலைந்து போயிருக்கும். அப்படிப்பட்ட நல்லவரை இந்த நிலைமையில் பார்க்கும் கொடுமையை நினைக்கும்போது, நான் இந்த உலகில் இருந்தும் இல்லாத நிலைபோல எனக்குத் தோன்றியது.
கறுப்புநாள்
திரையுலகில் எத்தனையோ பேரை ஏற்றிவிட்ட ஏணி சாய்ந்து கிடந்தது. என்னை பொறுத்தவரை 23.12.2014, கறுப்பு நாள். எங்கோ பிறந்த நான் சென்னைக்கு வந்து அவரை சந்தித்து, என்னை சினிமாவில் அவர் அறிமுகப்படுத்தி இன்று இப்படி ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் உட்கார வைத்தது, எனக்கும் அவருக்கும் இடையில் அப்படி ஒரு புரிதல் எப்படி ஏற்பட்டது? என்று எனக்குள் தோன்றியது. இறுதிசடங்கின் போது வாய்க்கரிசி போடுறவங்க போடலாம் என்ற குரல் கேட்டது, எனக்கு அன்னம் அளித்த என் ஆசானுக்கு வாய்க்கரிசி போட என் கைகள் ஏனோ நடுங்கின, அதை எனக்கு சொல்ல தெரியவில்லை.
சடங்கு எல்லாம் முடிந்து அவரது உடலுக்கு தீ மூட்டிய போது, ஒரு சகாப்தத்தை தீ தனக்கு இரையாக்கிக் கொள்ளப்போகிறதே... கடவுளே! அந்தத் தீயை அணைக்க என் கண்ணீர் போதவில்லையே... நான் என்ன செய்ய என்று என் உடல் பதறியது. கனத்த இதயத்துடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.
இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.