மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
குழந்தை நட்சத்திரமாக இருந்து கோலங்கள் சீரியலில் அறிமுகமான நீலிமா ராணி தொடர்ந்து சீரியல்களில் நடித்தார். பின்னர் திரைப்படங்களில் நடித்தார். பின்னர் திருமணமாகி செட்டிலானார். 4 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். சினிமாவில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பண்ணையாரும் பத்மினியும் நல்ல ரீ என்ட்ரியை கொடுத்தது. தற்போது அமளி துமளி, இருவர் உள்ளம், வாலிபராஜா படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். சின்னத்திரையில், வாணி ராணி மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் மகாபாரதம், தாமரை தொடர்களில் நடித்து வருகிறார். நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் ஆகியிருக்கிறார்.
தற்போது பிசியாக நடித்துக்கொண்டும், நிகழ்ச்சிகளை தொகுத்துக் கொண்டும் இருக்கும் நீலிமா விரைவில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகிறார். முன்னனி சேனல் ஒன்றில் டாக் ஷோ நடத்துவதற்கான பேச்சு நடந்து வருகிறது. அது முடிவான பிறகு ஏப்ரல் மாதம் வாக்கில் தயாரிப்பை தொடங்குவார் என்றும் அவரது கணவர் இயக்குவார் என்றும் தெரிகிறது.