சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
சினிமாவில் நடித்து கிடைக்கிற பெயரையும் புகழையும் வைத்துக்கொண்டு விளமபர படங்களில் நடிப்பது. கடை திறப்பு விழா என்றும் நடிகர் நடிகைகள் சம்பாதித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகைகள் த்ரிஷா, அனுஷ்கா, சமந்தா, காஜல்அகர்வால், தமன்னா உள்ளிட்ட பல நடிகைகள் இந்த மாதிரி சைடு பிஸ்னசில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் காஜல்அகர்வாலை எடுத்துக்கொண்டால், ஐதராபாத்தில் அதிகமாக முகாமிட்டிருக்கும அவர், ஒரு சிறிய கடை திறப்பு விழாவுக்ககு தன்னை அழைத்தால்கூட தனக்கு வரவேண்டிய லட்சங்கள் சரியாக வந்துவிட்டால் உடனே சென்று ரிப்பன் கட் பண்ணி விடுவார். அதோடு, அந்த விழாவுக்கு தான் செல்வது குறித்த விளம்பரங்கள் பெரிய அளவில் செய்யப்பட்டால் படு குஷியாகி விடுவாராம். இந்த நிலையில், சமீபத்தில் ஐதராபாத்தில் கட்டப்பட்டிருக்கும் ஒரு புதிய வணிக வளாகத்தின் திறப்பு விழாவில் காஜல்அகர்வால் கலந்து கொள்வதாக விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்ததாம். இதனால் அந்த ஏரியாவைச்சேர்ந்த காஜல்அகர்வாலின் ரசிகர்கள் அவரது வருகையை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தார்களாம். ஆனால, அந்த திறப்பு விழாவில் கலந்து கொள்ள காஜலை யாருமே அணுகவில்லையாம். அதனால் இந்த சேதி காஜலின் கவனத்துக்கு சென்றபோது ஷாக்காகி விட்டாராம் அவர்..அதனால் அதுபற்றி உடனே மறுப்பு செய்தி வெளியிட்ட காஜல், தன்னிடம் எந்தவித அனுமதியும் பெறாமல் தனது பெயரையும், போட்டோவையும் பயன்படுத்தியதற்காக அந்த வணிக வளாக நிர்வாகிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளாராம்.