ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜன்னல் ஓரம் படத்திற்கு பிறகு தகராறு படத்தில் வில்லியாக நடித்த பூர்ணா, அதன்பிறகு தமிழில் ஜெயம்ரவி நடித்து வரும அப்பாடக்கர் படத்தில் ஒரு பாடலில் குத்தாட்டமாடியிருக்கிறார். இந்த நிலையில், தெலுங்கில் அவர் நடிப்பில் வெளியான அவுனு-2 படத்தில் கிளாமர் நாயகியாக நடித்த அவரை அங்கு தற்போது பேச வைத்திருக்கிறது. அதனால், தற்போது ஸ்ரீமந்துடு உள்பட சில படங்களில் அவர் கமிட்டாகியிருக்கிறார். இருப்பினும், அப்பாடக்கரில் குத்தாட்டத்துக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கும் பூர்ணா, தெலுங்கு படங்களிலும் ஒரு பாட்டுக்கு ந்டனமாட விருப்பம தெரிவித்து வருகிறார். அதேசமயம், முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே ஆடுவேன் என்பதையும் உறுதியாக சொல்லி வருகிறாராம்.
இந்தநிலையில், ஏற்கனவே பரதநாட்டிய கலைஞரான பூர்ணா, அடுத்தபடியாக நடிப்பை விட நடனத்தில் கூடுதல் கவனம செலுத்த உள்ளாராம். அதனால் வெளிநாடுகளில் நடக்கும் கலைநிகழ்ச்சிகளில் ஆடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அதோடு, அப்படி கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நடிகர் நடிகைகள் ஒரு வாரத்திற்கு முன்கூட்டியே ரிகர்சலை தொடங்கியபோதும், பூர்ணா மட்டும் கடைசி ஒருநாள் மட்டுமே ரிகர்சலில் கலந்து கொள்கிறாராம். காரணம், எந்த மாதிரியான நடனமாக இருந்தாலும், ஒரு முறை பார்த்து விட்டாலே அப்படியே நடனமாடும் திறமை அவரிடம் உள்ளதாம். அதோடு, தான் நடனமாடிய பாடல்களை விட மற்ற நடிகைகள் ஆடிய பாடல்களில் ஆடுவதையே அதிகமாக விரும்பும் பூர்ணா, துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடகளுக்கு கலை நிகழ்ச்சிக்கு செல்லும்போது இந்தி பாடல்களாக தேர்வு செய்து ஆடி ரசிகர்களை மகிழ்விக்கிறாராம்.