ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், டிவிட்டர் ஆகியவற்றில் சில நட்சத்திரங்கள் மட்டுமே பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் நடிகை சமந்தாவும் ஒருவர். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா, கத்தி படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழிலும் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்க ஆரம்பித்துள்ளார். தற்போது விக்ரம் ஜோடியாக 10 எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறார். விரைவில் தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார்.
சமந்தா டிவிட்டர் தளத்தில் தீவிரமாக இயங்கி வரும் ஒரு நடிகை. அரசியல் உள்ளிட்ட பல விஷயங்களில் அவர் அந்த தளத்தில் அவருடைய கருத்தை பதிவு செய்து வருகிறார். இதற்கு முன்பு மகேஷ் பாபு பற்றி கூட கமெண்ட் அடித்து சர்ச்சையில் சிக்கினார். சமந்தாவின் டிவிட்டர் தளத்தில் அவரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை சில மணி நேரங்களுக்கு முன்பு 10 லட்சம் பேரைத் தொட்டது.
அது குறித்து, சமந்தா பதிவிட்டுள்ளதாவது, “உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி. ஒரு மில்லியன் தொடர்பாளர்கள். இங்கு நான் எதையும் கஷ்டப்பட்டுச் செய்யவேயில்லை. இங்கு புத்திசாலித்தனமாக பாசாங்கு செய்ய வேண்டியிருக்கிறது,” என்று அதிலும் வெளிப்படையான ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார்.