Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மணிரத்னம் இயக்கத்தில் தனுஷ்...!

05 ஜன, 2015 - 10:19 IST
எழுத்தின் அளவு:

'கொல வெறி' பாடல் மூலம் பாடலாசிரியராகவும், பாடகராகவும் திடீரென அவதாரம் எடுத்த தனுஷூக்கு அந்தப் பாடல் உலகப் புகழைப் பெற்றுக் கொடுத்தது. அதோடு மட்டுமல்லாமல் அவருக்கு ஹிந்திப் பட வாய்ப்பும் கிடைத்தது. ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், சோனம் கபூருடன் இணைந்து தனுஷ் நடித்து 2013ல் வெளிவந்த 'ராஞ்சனா' திரைப்படம் சூப்பர் வெற்றிப் படமாக அமைந்து, தனுஷூக்கு பாலிவுட்டிலும் வெற்றிப் பாதையை அமைத்துக் கொடுத்தது. அதற்கடுத்து மேலும் ஒரு திருப்புமுனையாக அமிதாப்புடன் இணைந்து 'ஷமிதாப்' என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் 6ம் தேதி வெளியாக உள்ளது.


இதனிடையே தனுஷை வைத்து ஒரு படம் இயக்கப் போகவதாக மணிரத்னம் முடிவெடுத்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்தப் படம் தமிழில் தயாரிக்கப்படவில்லையாம், ஹிந்தியில்தான் உருவாகப் போகிறதாம். மணிரத்னம் இயக்கி வரும் 'ஓகே கண்மணி' படத்தின் வேலைகளும் முடியும் தருவாயில் உள்ளது. தனுஷ் தற்போது 'மாரி' திரைப்படத்தில் நடித்து வருகிறார், விரைவில் வேல்ராஜ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.


தற்போது தனுஷூடன், மணிரத்னம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், அனைத்தும் சரிவர அமைந்தால் விரைவில் அவர்களிருவரும் இணையும் ஹிந்திப் படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. “குரு, ராவண்” ஆகிய ஹிந்திப் படங்களின் தோல்விக்குப் பிறகு மணிரத்னம் தமிழில் 'கடல்' படத்தை இயக்கினார். அந்தப் படமும் தோல்வியடைந்ததால் தற்போது துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிக்கும் 'ஓகே கண்மணி' படத்தை இயக்கி வருகிறார். அடுத்து ஹிந்தியில் ஒரு படத்தை அவர் இயக்க முடிவு செய்துள்ளார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in