ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உயிர், மிருகம், சிந்துசமவெளி போன்ற ஆபாச படங்களை இயக்கியவர் சாமி. அவர் தற்போது தனது ரூட்டை மாற்றி கங்காரு என்ற படத்தை செண்டிமென்ட் கதையில் இயக்கியிருக்கிறார். அதுவும் தமிழ் சினிமாவின் அழியாத காவியங்களான பாசமலர்கள், முள்ளும் மலரும், கிழக்கு சீமையிலே போன்ற அண்ணன்-தங்கை பாச உணர்வை வெளிப்படுத்திய படங்களை குறிப்பிட்டு, அந்த வரிசையில் எனது கங்காரு படமும் இடம்பிடிக்கும் என்று அடித்து சொல்லி வருகிறர்ர்.
இந்த படத்துக்காக கேரளாவில் இருந்து அர்ஜூனா என்றொரு நடிகரை இறக்குமதி செய்திருக்கிறார் சாமி. அதேபோல் படத்தின் நாயகி வேடத்துக்காக பிரியங்காவை பாண்டிச்சேரியில் இருந்து இறக்குமதி செய்துள்ளார். இந்த இரண்டு பேருமே அண்ணன்-தங்கை பாச உணர்வுகளை பக்காவாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்களாம்.
இதில் பிரியங்காவுக்கு கங்காருதான் முதல் படம் என்று சொல்லப்பட்டாலும் ஏற்கனவே சில படங்களில் நாயகியாக நடித்துள்ளார். ஆனால் அந்த படங்கள் எதுவுமே திரைக்கு வரவில்லை. அதனால் படங்களில் நடிப்பதற்காக சென்னைக்கு வரும் அவர், நடித்து முடித்ததும் பாண்டிசசேரிக்கு சென்று கொண்டிருந்தார்.
ஆனால், இந்த கங்காரு படத்தில் நடித்த பிறகு சினிமா மீது பிரியங்காவுக்கு நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. அதனால் சென்னையிலேயே தங்கி விட்ட அவர் சில புதிய படங்களுக்கான கதைகளையும் கேட்டு வருகிறார். மேலும், தொடர்ந்து குடும்ப பாங்கான கதாநாயகியாகவே நடிக்க விரும்பும் பிரியங்கா, கமர்சியல் கதைகள் என்றாலும் மாடர்ன் டிரஸ் அணிவேன். ஆனால் உடம்பை காட்ட மாட்டேன் என்று கதை கேட்கும்போதே சென்சார் போட்டு வருகிறார். அதனால் கங்காரு படத்தின் ரிசல்ட்டை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் கோலிவுட்டின் செண்டிமென்ட் இயக்குனர்கள்.