பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஆதிலாபாத் மாவட்டத்தை சேர்ந்த பாலு என்ற பத்து வயது சிறுவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஐதராபாத் எம்எஸ்ஜி மருத்துவனையில் மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு மரணத்துக்கு முன்பாக தான் மிகவும் நேசிக்கும் நடிகர் சிரஞ்சீவியை காண வேண்டும் என்கிற ஆசை இருந்ததுள்ளது. இதனை தெலுங்கு மீடியாக்கள் செய்தியாக ஒளிபரப்பியது.
இதனை பார்த்த சிரஞ்சீவி அவனுக்கு நிறைய பரிசு பொருட்களை வாங்கிக் கொண்டு பார்க்கச் சென்றார். தன் கனவு நாயகன் சிரஞ்சீவியை பார்த்த சிறுவன் பாலுவுக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி. அவனுடன் பேசிக் கொண்டிருந்த சிரஞ்வி அவனுக்கு ஆறுதல் சொன்னார். தைரியம் சொன்னார். அப்போது சிறுவன் பாலு தனது இன்னொரு ஆசையை அவரிடம் சொன்னான். உங்களுடன் ஒரு படத்தில் ஆடிப்பாடி நடிக்க வேண்டும் என்றான்.