ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் பேச தெரிந்த நடிகை என்கிற ப்ளஸ் பாய்ண்டை வைத்து கோலிவுட்டில் வளர்ந்தவர் ப்ரியாஆனந்த். அதோடு, ஆரம்பத்தில் படுகவர்ச்சியாக நடித்த அவர், இப்படியே போனால் இன்னும் சில படங்களோடு மார்க்கெட் அவுட்டாகி விடும் என்று சிலர் சொன்ன அட்வைஸ் காரணமாக அதன்பிறகு கவர்ச்சி இல்லாத கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்தார்.
ஆனால், அப்படி அவர் நடித்த ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே அவருக்கு வெற்றியாக அமைந்தன. ஆனால் அரிமா நம்பிக்கு பிறகு இரும்புக்குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியடைந்து விட்டன. அதனால் ப்ரியாஆனந்துக்கு அடுத்தபடியாக படம் தருவதாக சொல்லியிருந்த சில டைரக்டர்கள் இப்போது அவர்களை சந்திக்க சென்றாலே தெறித்து ஓடுகிறார்களாம்.
அதனால் அடுத்து புதிய படவாய்ப்புகள் கிடைக்குமா? கிடைக்காதா? என்பது புரியாமல் தடுமாறிப்போய் நிற்கும ப்ரியாஆனந்த், கடைசி முயற்சியாக தற்போது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தான் நடித்துள்ள வை ராஜா வை படத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தின் முடிவைப்பொறுத்துதான் அவரது அடுத்தகட்ட ந்டவடிக்கை இருக்குமாம். ஒருவேளை அந்த படமும் தன்னை ஏமாற்றிவிட்டால், அடுத்தபடியாக மலையாளம், தெலுங்கு என்று அண்டை மாநில மொழிகளில் படவேட்டையை தொடங்கிவிடுவாராம் ப்ரியாஆனந்த்.