ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமாவில் ஒரு காமெடி நடிகர் ஜெயிக்க வேண்டுமென்றால் அவர்களுக்கேற்ற காமெடியான ஸ்கிரிபட் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அவர்களது நடிப்புத்திறமை வெளிப்படும். ஆனால், சில சமயங்களில் காமெடி ட்ராக்கை டைரக்டர்கள் கொடுக்காதபோதும், அதில் நடிக்கும் பிரதான காமெடியன்கள் தனது காமெடி இலாகாவை வைத்து காமெடி காட்சிகளை ரெடி பண்ணிக்கொண்டு நடிப்பார்கள்.
அப்படித்தான் கவுண்டமணி, வடிவேலு, சந்தானம் போன்றவர்கள் நடித்தனர். ஆனால் சந்தானத்தைப்பொறுத்தவரை அவர் ஹீரோவாக நடித்ததால் அவருக்கான காமெடிகளை எழுதி வந்தவர்கள் வெவ்வேறு பாதைகளில் சென்று விட்டனர். சிலர், சில டைரக்டர்களிடம் காமெடி ட்ராக் எழுதி வருகின்றனர். இதனால், தற்போது சந்தானத்துக்கு காமெடி எழுத சரியான ஆட்கள் இல்லையாம்.
அதன்காரணமாக, கதை எழுதும்போதே காமெடி காட்சிகளையும் தயார் செய்து விடும் சில டைரக்டர்களின் படங்களில் நடிக்க தற்போது முயற்சி எடுத்து வருகிறார் சந்தானம். அந்த வகையில் தற்போது சுந்தர்.சி அவரது ஆஸ்தான டைரக்டராகி விட்டார். காரணம், சுந்தர்சியைப் பொறுத்தவரை நல்ல காமெடி சென்ஸ் உள்ளவர். அதனால் கதை சொல்லும்போதே வயிறு வலிக்க சிரிக்க வைத்து விடக்கூடியவர். அதோடு, தற்போது தனது படங்களில் தொடர்ந்து சந்தானத்தை அவர் பயன்படுத்தி வருகிறார்.