ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
அரசியல் பிரவேசத்துக்குப்பிறகு சினிமாவுக்கு வந்த வடிவேலு, மீண்டும் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று உறுதியாக இருந்தார். அதனால் சில டைரக்டர்களும் அவரிடம் கதைகள் சொல்லி வந்தனர். அதில் ஏஜிஎஸ் பிலிம்சிடம் தெனாலிராமன் என்ற கதையை சொல்லிவிட்டு வடிவேலுவிடம் வந்த யுவராஜூம் அவரிடம் கதை சொன்னார்.
அந்த கதை தனது ரீ-என்ட்ரிக்கு சரியாக இருக்கும் என்று நினைத்த வடிவேலு, தெனாலிராமன் படத்தில் நடிக்க ஒப்புதல் தெரிவித்து இரண்டு வேடங்களில் நடித்தார். ஆனால் அதற்கு முன்பு சிம்புதேவன் இயக்கத்தில் அவர் நடித்திருந்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி அளவுக்கு அந்த படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தோல்வியடைந்து விட்டது.
ஆனபோதும், மீண்டும் அதே யுவராஜின் இயக்கத்தில் ஒரு படத்தில் தான் நாயகனாக நடிக்கப்போவதாக கூறி வந்தார் வடிவேலு. ஆனால், தெனாலிராமன் தோல்வியடைந்ததால் அவர் நடிக்கும் படததை தயாரிக்க தயாரிப்பாளர்கள் யாருமே முன்வரவில்லையாம். அதனால், அந்த படம் இப்போதுவரை தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில், வடிவேலு சில படங்களில் காமெடி வேடங்களில் நடிக்க கமிட்டாகியிருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. ஆனால் இதுபற்றி வடிவேலு தரப்பில் விசாரித்தபோது, மீண்டும் காமெடியனாக நடிக்க அவர் எந்த படத்திலும் கமிட்டாகவில்லை. மீண்டும் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பார் என்கிறார்கள். அதேசமயம் எக்காரணம் கொண்டும் சொந்த படம் எடுக்க மாட்டார் வடிவேலு. யாராவது தயாரிப்பாளர்கள் பணம் போட்டால் மட்டுமே நடிப்பார் எனறும் உறுதியாக சொல்கிறார்கள்.