சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
இயக்குநர் சீனுராமசாமியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இடம் பொருள் ஏவல் பாடல்கள் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டன. முதல் முறையாக வைரமுத்து - யுவன் கூட்டணியில் வந்திருக்கும் பாடல்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த ஆல்பம் உருவானதில் ஒரு சுவாரசியமான பின்னணி கதை இருக்கிறது. உணர்வுபூர்வமான களங்களில் இயங்கும் சீனுராமசாமியின் படங்களுக்கு பாடல் எழுத வேண்டும் என்பது வைரமுத்துவின் இளையமகனான கபிலன்வைரமுத்துவின் விருப்பம். இடம் பொருள் ஏவல் பாடல் வேலைகள் தொடங்கும்போது “கபிலா.. அப்பாவும் யுவனும் இணையும் முதல் படம் - இந்த படத்துல நீ இரண்டு பாட்டு எழுதணும்” என்று சீனுராமசாமி அழைத்திருக்கிறார். அதற்கு கபிலன்வைரமுத்து “இரண்டு பேரும் இணையறது ஒரு அழகான அக்கேஷன். இதுல எல்லா பாட்டையும் அப்பாவே எழுதினாதான் முழுமையாகவும் கம்பீரமாகவும் இருக்கும். அவரே எல்லா பாடல்களையும் எழுதட்டும்” என்று மெளனமாக விலகிவிட்டார். சீனுராமசாமி இதை எதிர்பார்க்கவில்லை. படத்தின் ஆடியோ வெளிவரும்வரை வைரமுத்துவிற்கே இது தெரியாது என்பதுதான் ப்யூட்டி.