நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் |
இயக்குநர் சீனுராமசாமியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இடம் பொருள் ஏவல் பாடல்கள் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டன. முதல் முறையாக வைரமுத்து - யுவன் கூட்டணியில் வந்திருக்கும் பாடல்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த ஆல்பம் உருவானதில் ஒரு சுவாரசியமான பின்னணி கதை இருக்கிறது. உணர்வுபூர்வமான களங்களில் இயங்கும் சீனுராமசாமியின் படங்களுக்கு பாடல் எழுத வேண்டும் என்பது வைரமுத்துவின் இளையமகனான கபிலன்வைரமுத்துவின் விருப்பம். இடம் பொருள் ஏவல் பாடல் வேலைகள் தொடங்கும்போது “கபிலா.. அப்பாவும் யுவனும் இணையும் முதல் படம் - இந்த படத்துல நீ இரண்டு பாட்டு எழுதணும்” என்று சீனுராமசாமி அழைத்திருக்கிறார். அதற்கு கபிலன்வைரமுத்து “இரண்டு பேரும் இணையறது ஒரு அழகான அக்கேஷன். இதுல எல்லா பாட்டையும் அப்பாவே எழுதினாதான் முழுமையாகவும் கம்பீரமாகவும் இருக்கும். அவரே எல்லா பாடல்களையும் எழுதட்டும்” என்று மெளனமாக விலகிவிட்டார். சீனுராமசாமி இதை எதிர்பார்க்கவில்லை. படத்தின் ஆடியோ வெளிவரும்வரை வைரமுத்துவிற்கே இது தெரியாது என்பதுதான் ப்யூட்டி.