சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி |
2014ம் ஆண்டு ஜெயம்ரவி நடித்த ''நிமிர்ந்து நில்'' படம் மட்டுமே வெளிவந்தது. அந்தப் படத்தை மீடியாக்கள் பாரட்டினாலும் வணிகரீதியில் வெற்றி பெறவில்லை. 2009ல் வெளிவந்த பேராண்மைக்கு பிறகு ஜெயம் ரவி பெரிய வெற்றி எதையும் பெறவில்லை. தில்லாலங்கடி, எங்கேயும் காதல், ஆதிபகவன் படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. நீண்ட நாள் தயாரிப்பில் இருக்கும் பூலோகம் படமும் ரிலீசாகவில்லை.
வெயிட்டிங்கில் இருக்கும் பூலோகம் படம், தற்போது தயாரிப்பில் இருக்கும் ஹன்சிகாவுடன் நடிக்கும் ரோமியோ ஜுலியட், அண்ணன் இயக்கத்தில் நயன்தாராவுடன் நடிக்கும் தனி ஒருவன், சுராஜ் இயக்கத்தில் த்ரிஷாவுடன் நடிக்கும் அப்பாடக்கர் படங்கள் 2015ல் வெளிவர இருக்கிறது.
இந்த நிலையில் புதுச்சேரியில் அப்பாடக்கர் படப்பிடிப்பில் இருந்த ஜெயம்ரவி திருநள்ளார் சனீஸ்பர பகவான் கோவிலுக்கு சென்று வழிபட்டார். கோவிலின் அனைத்து சன்னதிகளுக்கும் சென்ற அவர் சனீஸ்வர பகவான் சன்னிதியில் நீண்ட நேரம் இருந்து பிரார்த்தனை செய்தார். அவருடன் காமெடி நடிகர் சூரி, இயக்குனர் சுராஜ் ஆகியோரும் சென்றிருந்தனர். ஜெயம்ரவி வந்த தகவல் கடைசி வரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.