ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2014ம் ஆண்டு ஜெயம்ரவி நடித்த ''நிமிர்ந்து நில்'' படம் மட்டுமே வெளிவந்தது. அந்தப் படத்தை மீடியாக்கள் பாரட்டினாலும் வணிகரீதியில் வெற்றி பெறவில்லை. 2009ல் வெளிவந்த பேராண்மைக்கு பிறகு ஜெயம் ரவி பெரிய வெற்றி எதையும் பெறவில்லை. தில்லாலங்கடி, எங்கேயும் காதல், ஆதிபகவன் படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. நீண்ட நாள் தயாரிப்பில் இருக்கும் பூலோகம் படமும் ரிலீசாகவில்லை.
வெயிட்டிங்கில் இருக்கும் பூலோகம் படம், தற்போது தயாரிப்பில் இருக்கும் ஹன்சிகாவுடன் நடிக்கும் ரோமியோ ஜுலியட், அண்ணன் இயக்கத்தில் நயன்தாராவுடன் நடிக்கும் தனி ஒருவன், சுராஜ் இயக்கத்தில் த்ரிஷாவுடன் நடிக்கும் அப்பாடக்கர் படங்கள் 2015ல் வெளிவர இருக்கிறது.
இந்த நிலையில் புதுச்சேரியில் அப்பாடக்கர் படப்பிடிப்பில் இருந்த ஜெயம்ரவி திருநள்ளார் சனீஸ்பர பகவான் கோவிலுக்கு சென்று வழிபட்டார். கோவிலின் அனைத்து சன்னதிகளுக்கும் சென்ற அவர் சனீஸ்வர பகவான் சன்னிதியில் நீண்ட நேரம் இருந்து பிரார்த்தனை செய்தார். அவருடன் காமெடி நடிகர் சூரி, இயக்குனர் சுராஜ் ஆகியோரும் சென்றிருந்தனர். ஜெயம்ரவி வந்த தகவல் கடைசி வரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.