ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பசங்க படத்தை இயக்கிய பாண்டிராஜ், அதையடுத்து, பசங்களை மையமாக வைத்து மெரினா என்ற படத்தை இயக்கினார். பின்னர், பசங்களை மையமாக வைத்து விஜய் மில்டன் இயக்கிய கோலிசோடா படத்திற்கு வசனம் எழுதினார். இந்த மூன்று படங்களுமே வெற்றி பெற்றது. அதனால், மீண்டும் பசங்களை மையமாக வைத்து ஒரு கதை பண்ணினார் பாண்டிராஜ்.
அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் முன்னணி நடிகை யாராவது நடித்தால் சிறப்பாக இருககும் என்று கருதியபோதுதான் ஜோதிகாவை நடிக்க வைக்க முயற்சி செய்தார். கதை கேட்ட ஜோதிகாவுக்கும் பிடித்து விட்டதால், அந்த படத்தை சூர்யாவை தயாரிக்கவும் முன்வந்தார். ஆனால், அந்த சமயத்தில் சிம்பு-நயன்தாராவை இணைத்து இது நம்ம ஆளு படத்தை பாண்டிராஜ் இயக்கி வந்ததால், ஜோதிகா நடிக்க இருந்த படம் தாமதமானது.
விளைவு, அந்த நேரத்தில் மஞ்சுவாரியார் மலையாளத்தில் நடித்த ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தை பார்த்த ஜோதிகாவுக்கு அந்த படம் ரொம்பவே பிடித்து விட, அதில் நடிக்க விரும்பினார். அதையடுத்து இப்போது அப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அந்த படத்தையும் சூர்யாவே தயாரிக்கிறார்.