ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் படம் ஐ. விக்ரம்-எமி ஜாக்சன் நடித்துள்ள இந்த படத்தில் 200 பாடி பில்டர்கள் நடித்துள்ளனர். அவர்களில் 6 பேர் முக்கியமானவர்களாம். அந்த 6 பேரில் இந்த கிருஷ்ணாவும் ஒருவர். இவர் காஞ்சிபுரத்திலுள்ள பினாயூரைச்சேர்ந்தவர். 2004ம் ஆண்டில் தமிழ்நாடு அளவில் நடந்த பாடி பில்டர்கள் போட்டியில் பங்கேற்று மிஸ்டர் தமிழ்நாடாக வந்திருக்கிறார்.. அதையடுத்து, 2007-ல், மிஸ்டர் சென்னையாக தேர்வானவர். கல்லூரி அளவில் நடந்த பாடி பில்டர் போட்டியிலும சாம்பியனாக வந்துள்ளாராம்.
அதையடுத்து சினிமா ஆசையில் சென்னை வந்து நடிப்பதற்காக போராடிய கிருஷ்ணாவுக்கு பத்து ஆண்டு போராட்டத்திற்கு பிறகு பாசக்கார நண்பர்கள் படத்தில் மெயின் வில்லன் வேடம் கிடைத்திருக்கிறது. பின்னர், கீரிப்புள்ள படத்தில் 4 நண்பர்களில் ஒருவராக நடித்தவர், தற்போது, ஷங்கர் இயக்கியுள்ள ஐ படத்தில் பாடி பில்டராக நடித்திருக்கிறார்.
இதுபற்றி கிருஷ்ணா கூறுகையில், ஐ படத்தில் மொத்தம் 200 பாடி பில்டர்கள் நடித்திருந்தபோதும், முக்கியத்துவம் வாய்ந்த 6 பாடி பில்டர்களில் நானும் ஒருவராக நடித்திருக்கிறேன். மொத்தம் 30 நாட்கள் நடித்தேன். சென்னையிலுள்ள பின்னி மில், எண்ணூர் ஆகிய பகுதிகளில்தான் படப்பிடிப்பு நடந்தது. இந்த ஐ படததின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு 4 மாதத்திற்கு முன்பே எங்களை தயார்படுத்தினார் ஷங்கர் சார். அப்போது எங்களுக்கு தேவையான உணவு செலவுகளுக்கு மட்டும் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரை ஒவ்வொருத்தருககும் கொடுத்தார். அந்த அளவுக்கு படம் நன்றாக வர வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு விசயத்திலும் கவனம் செலுத்தினார் டைரக்டர்.
இந்த படத்தில் நாங்களெல்லாம் செய்ததை விட டைரக்டர் ஷங்கரும், சீயான் விக்ரமும் கொடுத்திருக்கும் உழைப்புதான் பிரமிக்கத்தக்கது என்று கூறும் கிருஷ்ணா, ஐ படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு எனது 10 ஆண்டு கடினமான போராட்டத்துக்கு கிடைத்த பரிசாகத்தான் நினைக்கிறேன் என்கிறார்.
மேலும், இந்த ஐ படத்தையடுத்து, சரண் இயக்கியுள்ள ஆயிரத்தில் இருவர், நூறு, கன்னா பின்னா போன்ற படங்களிலும் நடித்து வரும் கிருஷ்ணாவுக்கு, நம்பியார், பிரகாஷ்ராஜ் போன்று சினிமாவில் பெரிய வில்லனாக வலம் வர வேண்டும் என்பதுதான் லட்சியமாம்.அதோடு, இதுவரை கிருஷ்ணா என்று மட்டும் தனது பெயரை வைத்திருக்கும் அவர், இந்த ஐ படத்திற்கு பிறகு ஐ கிருஷ்ணா என்று பெயரை மாற்றவும் முடிவு செய்துள்ளாராம்.