Advertisement

சிறப்புச்செய்திகள்

சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜா மீது ஆடியோ கம்பெனி அதிபர் போலீஸ் கமிஷனரிடம் புகார்

11 டிச, 2014 - 17:53 IST
எழுத்தின் அளவு:

மலேசியாவை சேர்ந்த அகி மியூசிக் நிறுவனத்தின் மீது கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார் இளையராஜா. தனக்கு முறையான ராயல்டி தருவதில்லை என்றும், தனது இசையை சட்டத்திற்கு புறம்பாக விற்பதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.


இந்நிலையில் மலேஷியாவைச் சேர்ந்த அகி மியூசிக் நிறுவனத்தின் தலைவர் அகிலன், சென்னைக்கு வந்து காவல்துறை ஆணையரிடம் இளையராஜா மீது புகார் கொடுத்திருப்பதாக தகவல் அடிபடுகிறது. காவல்துறை ஆணயரை சந்திப்பதற்கு முன், சென்னை வடபழனியில் உள்ள இசையமைப்பாளர் சங்கத்திலும் இளையராஜா மீது புகார் கொடுத்திருக்கிறாராம் அகிலன். இளையராஜா மீது அகிலன் வைக்கும் புகார் என்ன என்று விசாரித்தபோது... அகிலன் கொடுத்த புகார் காப்பியே நம் கைக்கு கிடைத்தது.


அதில் குறிப்பிட்டுள்ளதை அப்படியே தருகிறோம்....


2007 எங்களுடன் ஒப்பந்தம் செய்துவிட்டு 2011 வரையிலும் எங்களை வியாபாரம் செய்யவிடாமல் தடுத்ததோடு 2013 இல் எங்கள் ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும்போதே எங்களுக்கு தெரியாமல் சட்டவிரோதமாக வேறு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு எங்களை விட்டுக்கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். வேறு வழியின்றி அவருக்கு எதிராக நாங்கள் வழக்குத் தொடரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். அந்த வழக்கு ஒரு வருடத்திற்கு மேலும் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி 2014 எங்களுடன் எந்த ஒரு ஒப்பந்தமும் கையெழுத்திடவில்லை என்று பொய் தகவல் அளித்து எங்களுக்கு எதிராக தடையுத்தரவு பெற்றதொடு, 2010 இல் எங்களுடன் அவர் பாடல்கள் சம்பந்தமாக ஒப்பந்தம் செய்திருப்பதாக பத்திரிகை மற்றும் தொலைக் காட்சிகளுக்கு நேரடி அறிக்கை அளித்துவிட்டு இன்று அதையும் மறுத்து வருகிறார்.


எங்கள் தரப்பு விவாதங்களை நீதிமன்றத்தில் வழங்கி தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், சட்டத்திற்கு புறம்பாக பொய்ப்புகார்களை போலிசாரிடம் வழங்கி எங்கள் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து அராஐகமாக நடந்ததோடு, பிற இசையமைப்பாளர்களின் மற்றும் தயாரிப்பாளர்களின் பாடல்களைக் கூட நாங்கள் விற்க முடியாத வகையில், எங்கள் அலுவலகத்தையும் வியாபாரத்தையும் முடக்கி இருக்கிறார்.


எந்த ஆதாரங்களும் அற்ற நிலையில் தினம் தினம் பொய்ப் பிரச்சாரங்களின் மூலம் பத்திரிக்கை அறிக்கை வெளியிட்டு எங்களின் நற்பெயரை களங்கப்படுத்துவதோடு, பிற இசையமைப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் எங்கள் மீது நம்பிக்கை இழக்கும்படி செய்து வருகிறார். பல தயாரிப்பாளர்களிடம் நேரிடையாக நாங்கள் ஒப்பந்தம் இட்டிருக்கும் அவரது பிற பாடல்களுக்கும் சட்டவிரோதமாக உரிமை கொண்டாடுவதோடு, அவருக்கு உரிமை இல்லாத அந்த சிலப்பாடல்களையும் அவர் நிறுவனத்தின் மூலம் வெளியீடு செய்து, தயாரிப்பாளர்களுக்கும் எங்களுக்கும் பெறும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறார்.


அம்புலி, மாலுமி, தாண்டவகோனே, ஆ, தீக்குளிக்கும் பச்சை மரம், செங்காத்து பூமியிலே போன்ற பல சிறு தயாரிப்பாளர்கள மற்றும் இசையமைப்பாளர்களின் பாடல்களை வெளிட்டு ஆதரவு அளித்துவரும் எங்களை களங்கப்படுத்தி சட்டவிரோதமாக எங்கள் வியாபாரத்தை முடக்குவதன் மூலம் பிற தயாரிப்பாளர்களுக்கும் இசையமைப்பாளரகளுக்கும் பல வழிகளில் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறார்.


அது மட்டுமல்லாது, இளையராஜாவை நாங்கள் ஏமாற்றி வருகிறோம், திருடர்கள், நேர்மையற்றவர்கள் என்று அவரது அதிகாரப்பூர்வ முகநூல் ரசிகர் மன்றத்தின் வழியும் பத்திரிகை மூலமும் செய்திகள் பரப்பி அவரது ரசிகர்களிடத்தில் எங்கள் மீது வெறுப்பையும் கோபத்தையும் உண்டு பண்ணி வருகிறார்கள். இதை நம்பி சில ரசிகர்கள் அந்த முகநூலில் நேரடியாகவும் எங்களுக்கு மறைமுகமாகவும் கொலை மிரட்டல்களும் விடுகிறார்கள்.”


அகிலன் மீது இளையராஜாவும், இளையராஜா மீது அகிலனும் மாறி மாறி புகார் கொடுத்திருப்பது ரசிகர்களை குழப்பி இருக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in