ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
லிங்கா படம் ரிலீஸாக எந்த தடையும் இல்லை, ஆனால் ரூ.10 கோடி கோர்ட்டில் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினி இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் லிங்கா. இப்படத்தில் ரஜினி ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரஜினியின் நண்பர் ராக்லைன் வெங்கடேஷ் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் கதை என்னுடையது என்று ரவி ரத்தினம் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு ஒன்று தொடர்ந்தார்.
அதில் முல்லைவனம் 999 படம் மூலம் இயக்குனரானேன். இக்கதை முல்லைப் பெரியாறு அணை, அதை கட்டிய பொறியாளர் பென்னிகுவிக் வரலாற்றை கருவாகக் கொண்டது. அக்கதையை யூ டியூப்பில் பதிவேற்றம் செய்தேன். முல்லைவனம் 999 கதையை திருடி, லிங்கா படம் தயாரித்துள்ளனர். இதை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்து, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வினியோகம் செய்ய உள்ளார். வழக்குப் பதிவு செய்யக்கோரி மதுரை தல்லாகுளம் போலீசில் புகார் செய்தேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். லிங்கா படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறினார்.
இதுதொடர்பாக ரஜினி விளக்கம் கொடுத்தார். ரஜினி தமது மனுவில், மனுதாரர் உள்நோக்குடன் மனு தாக்கல் செய்துள்ளார். குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை. படத்தில் நடித்துள்ளதைத் தவிர எனக்கு வேறு சம்பந்தமில்லை. எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் விளம்பர நோக்கில் மனுதாரர் வழக்கு தாக்கல் செய்துள்ளார், என பதில் மனு தாக்கல் செய்தார். இதுபோல் கே.எஸ்.ரவிக்குமார், கதாசிரியர் பொன்குமரன் ஆகியோரும் விளக்கம் கொடுத்தனர்.
இந்த வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டிசம்பர் 3ம் தேதி தனி நீதிபதி வேணுகோபால் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் மனுதாரர் ரவி ரத்னம், நிவாரணம் கோரி சிவில் கோர்ட்டை அணுகலாம் என்று அறிவுறுத்தினார்.
இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து ரவி ரத்தினம் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் தனபாலன் மற்றும் வேலுமணி ஆகியோரது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதில், இந்த வழக்கு தொடர்பாக மனுதாரர் சிவில் நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும், ஏற்கனவே தனிநீதிபதி அளித்த உத்தரவு சரி தான். லிங்கா படத்தை தடை செய்ய முடியாது. இருப்பினும் மனுதாரருக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் அதற்கு ஏற்றாற்போல், தற்போது லிங்கா படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ரூ.5 கோடியை மதுரை ஐகோர்ட்டில் செலுத்த வேண்டும். மேலும் ரூ. 5 கோடிக்கு வங்கி பிணை பத்திரமும் காண்பிக்க வேண்டும். நாளைக்குள் அவர் பணத்தை கட்டவேண்டும் என்று உத்தரவிட்டனர்.