பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
ரஜினிகாந்த் என்றாலே சூப்பர்ஸ்டார் என்பதுதான் ஒருபக்கம் ஞாபகத்திற்கு வந்தாலும் இன்னொருபக்கம் எளிமை என்பதும் ஞாபகத்திற்கு வரும். அந்தஅளவிற்கு தன்னை இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார் என்று அவர் என்று மேகாட்டிக் கொண்டதில்லை என்று அவருடன் பழகியவர்கள் சொல்வார்கள். புதிதாக நடிக்க வரும் நடிகர்களிடம் கூட மிகவும் சாதாரணமாக பழகக்கூடியவர் ரஜினிகாந்த் என்பார்கள். அவருடைய வெற்றிக்கு அந்த எளிமை தான் மிக முக்கியக்காரணம். ஆனால், இன்று பலரும் ஒரு படத்தில் நடித்து புகழ்பெற்றுவிட்டால் கூட ஏதோ உலகமே அவர்கள் காலடியில் வந்துவிட்டது போன்று நடந்து கொள்கிறார்கள்.
தன்னுடைய பழைய கண்டக்டர் வாழ்க்கையை என்று மறக்காதவர் ரஜினிகாந்த் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. அதைப்பற்றி சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த 'லிங்கா' படவிழாவில் ரஜினிகாந்துடன் நடித்த ஜெகபதிபாபு அவரது பேச்சில் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். “நடிகர் என்பதைக் கடந்து ரஜினிகாந்த் மிகச்சிறந்த மனிதர். 'கதாநாயகடு' படத்திற்காக அவருடன் நடித்தபோது அவர் எப்போதுமே எளிமையாக இருக்க வேண்டும் என்றும் பஸ் கண்டக்டராக வேலை பார்த்த அந்த மகிழ்ச்சிகரமான நாட்களை 'மிஸ்' செய்கிறேன் என்றும் கூறினார். பணமோ, பெயரோ கிடைத்த பிறகு பலரும் அவர்களுடைய பழைய நாட்களைப்பற்றி பேச மாட்டார்கள். ஆனால், ரஜினிகாந்த் அவர்களில் ஒருவரில்லை,” என ரஜினியைப் பற்றி மனதாரப் பாராட்டிப் பேசினார்.