ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்நாடெங்கும் மட்டுமல்ல உலகெங்கும் ரஜினி ரசிகர்களிடம் 'லிங்காஃபீவர்' தொற்றிக் கொண்டுள்ளது. நாளை வெளியாக உள்ள 'லிங்கா' படம் சமூகவலைத்தளங்களிலும் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சிலநாட்களாகவே 'லிங்கா' பற்றிய செய்திகள் டிரெண்டிங்கில் உள்ளன. சில தினங்களுக்குமுன் ரஜினி ரசிகர் ஒருவர் போட்ட 'லிங்காஃபீவர்' பற்றிய ஒரு பதிவு 'வைரல் ஃபீவர்'ஆக பரவிவிட்டது. அதாவது, ஒருவர்“ எனக்கு 'லிங்காஃபீவர்' அடித்துக் கொண்டிருப்பதால் விடுமுறை அளிக்க வேண்டும்,” என்று விடுமுறை கடிதம் எழுதியதுதான் அந்தப பரபரப்பிற்கு காரணம்.
இந்த 'லீவு' விவகாரம் நட்சத்திரங்களையும் வெகுவாக கவர்ந்துவிட்டது. ரஜினிகாந்தின் மாப்பிள்ளையும், நடிகருமான தனுஷுற்கும் 'லிங்காஃபீவர்' வந்து அவரும் விடுமுறைக்கடிதம் கொடுத்து விட்டாராம். அவர் யாருக்கு விடுமுறைக்கடிதம் கொடுத்திருப்பார் என்று குழப்பமாக இருக்கிறதா... தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் 'மாரி' படத்தில் நடித்து வருகிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. 'லிங்கா' படம் பார்ப்பதற்காக தனக்கு ஒருநாள் விடுமுறை தருமாறு படத்தின் இயக்குனரிடம் அவர் விடுமுறை வேண்டுமென கேட்டுள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் போட்ட டுவிட்டர் பதிவில், “நாளை மறுநாள் லிங்கா நாள்.அதற்காக என்னுடைய இயக்குனர் பாலாஜி மோகனிடம் 'லீவ்லெட்டர்' கொடுத்துவிட்டேன்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்னமா யோசிக்கிறாங்கப்பா...!