ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஹுட் ஹுட் புயலால் கடுமையான சேதம் ஏற்பட்டது. அதற்காக ஆந்திர முதல்வரின் நிவாரண நிதிக்கு தமிழ் நடிகர்கள் உட்பட பலரும் நிதி உதவி வழங்கினர். கடந்த வாரம் ஹைதராபாத்தில் 'மேமு சைதம்' என்ற மிகப் பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. அதற்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்களுக்கு அழைப்பும் அனுப்பப்பட்டது. ஆனால், ரஜினிகாந்த் அந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை, இதுவரை எந்த ஒரு நிவாரண நிதியும் வழங்கவில்லை. அதற்காக ரஜினிகாந்த் தெலுங்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
நேற்று ஹைதராபாத்தில் 'லிங்கா' தெலுங்குப் படத்திற்கான இசை வெளியீட்டின் வெற்றி விழா நடைபெற்றது. அதில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, கே.விஸ்வநாத், ஜெகபதி பாபு, தெலுங்குத் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் சீனிவாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ரஜினி பேசும் போது கூறியதாவது, “மேமு சைதம்' நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாததற்கு மிகவும் வருந்துகிறேன், அதற்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் நான் மிகவும் வருந்துகிறேன். விரைவில் அவர்களுக்கான நிவாரண நிதி என்ன என்பதை நான் அறிவிக்கிறேன். சென்னை திரும்பியதும் அது பற்றிய தகவலை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்,” என அறிவித்தார்.
மிகவும் காலதாமதமாக் கொடுத்தாலும் ரஜினிகாந்த் தரும் நிதியுதவி பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்திற்கு உதவும். ஒரு வேளை நேரடியாக தெலுங்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட பின் உதவித் தொகையைப் பற்றிய அறிவிப்பை வெளியிடலாம் என ரஜினிகாந்த் நினைத்திருக்கலாம் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.