ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கன்னடப்படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மேற்பார்வையில் ரஜினியும் பங்குதாரராக இணைந்து தயாரித்துள்ள படம் - 'லிங்கா'. கடந்த காலத்தில் ஏற்பட்ட அனுபவசம் காரணமாகவும், ஒருவேளை லிங்கா படம் சரியாக ஓடவில்லை என்றால் விநியோகஸ்தர்கள் தன்வீட்டில் வந்து பிரச்சனை செய்யக்கூடாது என்பதாலும் தயாரிப்பில் தான் பங்கு பெற்றிருப்பதை ரகசியமாக ரஜினி தரப்பினர் ரகசியமாக வைத்திருக்கின்றனர். அதே சமயம் லிங்கா படத்தை பெரிய விலைக்கு விற்றுள்ளனர்.
'ஈராஸ்' நிறுவனம் லிங்கா படத்தை உலகம் முழுக்க வெளியிடுகிறது. சுமார் 200 கோடி வேர்ல்ட் ரைட்ஸை வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிறுவனத்திடமிருந்து பெரும் விலை கொடுத்து 'லிங்கா'வை கோவை தவிரித்து, தமிழ்நாடு முழுக்க வெளியிடும் உரிமையை வேந்தர் மூவீஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. 'லிங்கா'வின் தமிழக உரிமையை வாங்கிய வேந்தர் மூவீஸ்' நிறுவனமே 'லிங்கா'வை கேரளாவில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது. ரஜினி நடித்த படங்களிலேயே இப்படம்தான் அதிக விலைக்கு கேரளா ரைட்ஸ் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. பெரிய விலை கொடுத்து வாங்கியதால், 'லிங்கா'வை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளா முழுக்க அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியிடுவதற்கான வேலைகளில் வேந்தர் மூவீஸ் நிறுவனம் மும்முரமாக ஈடுப்பட்டுள்ளது.