விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
அங்காடித்தெரு படத்திற்கு பிறகு அஞ்சலி மிகப்பெரிய நடிகையாக வருவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், அதையடுத்து அவர் நடித்த சில படங்களின் தோல்வி காரணமாக வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் நடித்து எதிர்பார்ப்புகளை வீணடித்தார் அஞ்சலி. ஆனால், இப்போது ஜெயம்ரவியுடன் அப்பாடக்கர், விமலுடன் மாப்பிள்ளை சிஙகம் பட்ங்களில் நடித்து வரும் அஞ்சலி, இதன்பிறகு தனது சினிமா கேரியரை வலுவானதாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று வித்தியாசமான கதைகள் பக்கம் திரும்பியிருக்கிறார்.
குறிப்பாக, ராணி ருத்ரம்மா தேவி படத்தில் சரித்திர கதையில் நடித்த அனுஷ்கா இப்போது பாகுபாலியில் தமன்னாவுடன் இணைந்து அதேபோன்ற இன்னொரு சரித்திர பின்னணி கொண்ட கதையில் நடிப்பதால், தானும் அந்த மாதிரி நடித்து தனது ரேஞ்சை உயர்ததிக்கொள்ள ஆசைப்படுகிறாராம் அஞ்சலி.
அதோடு, தெலுஙகில் கீதாஞ்சலி படத்திற்கு பிறகு தனது மார்க்கெட் ஓரளவு எகிறி நிற்பதால், தான் நினைத்ததை சாதித்துக்கொள்ள இதுதான் சரியான தருணம் என்று முடிவு செய்து சில சரித்திர பட டைரக்டர்களிடம் படவேட்டையை தொடங்கியிருக்கிறாராம் அஞ்சலி. அதோடு, தனது எடையையும் கணிசமான அளவு குறைத்து, வாள் சண்டை, குதிரை ஏற்றம் உள்ளிட்ட சில பயிற்சிகளையும் பயின்று தன்னை தயார்படுத்திக்கொள்ளவும் அடுத்தகட்ட வேலைகளில இறங்கபபோகிறாராம் அஞ்சலி.