காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
தனது தம்பி சத்யாவை முதலில் படித்துறை என்ற படத்தில்தான் நடிக்க வைத்தார் ஆர்யா. அந்த படத்தை அவரே தயாரித்தார்.ஆனால் அப்படம் கிடப்பில் கிடக்கிறது. இதையடுத்து டிவி நடிகர் விஜய் ஆதிராஜ் இயக்கிய புத்தகம் படத்தில் நடித்தார் சத்யா. அந்த படம் ஓடவில்லை, அதையடுத்து. தம்பி சத்யாவுக்கு சினிமாவில் பெரிய எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று அமரகாவியம் என்ற படத்தை தானே கோடிகளை கொட்டி தயாரித்தார் ஆர்யா.
ஆனால், எதிர்பார்க்கப்பட்ட அந்த படமும் சத்யாவுக்கு அதிர்ச்சி தோல்வியாக அமைந்து விட்டது. இருப்பினும், அந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது அவரது மார்க்கெட் எகிறும் என்கிற எதிர்பார்ப்புகள் இருந்ததால், எட்டுத்திக்கும் மதயானை, காதல் டூ கல்யாணம், சென்னை சிங்கப்பூர் ஆகிய படங்களில் கமிட்டானார் சத்யா.
இதில், இரண்டு படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கும் தயாராகி விட்டது. ஆனபோதும், சத்யா நடித்த புத்தகம், அமரகாவியம் எனற் இரண்டு படங்களுமே தோல்வி என்பதால் படங்களை வாங்குவதற்கு ஆளில்லையாம். அதனால், ஏற்கனவே அமரகாவியம் படத்தை ரிலீஸ் செய்த ஆர்யா, விஷ்ணு நடித்த ஜீவா படத்தையும் விஷாலுடன் இணைந்து வெளியிட்டதால், இப்போது சத்யா நடித்துள்ள படங்களை வெளியிட தங்களுக்கு உதவி செய்யுமாறு ஆர்யாவை கேட்டுக்கொண்டு வருகிறார்களாம் அப்படத்தை தயாரித்தவர்கள்.
ஆனால், அமரகாவியம் படத்திற்கு பிறகு உஷாராகி விட்ட ஆர்யாவோ, விஷ்ணு நடித்த ஜீவா படத்துக்கு காட்டிய கருணையைகூட தனது தம்பி சத்யாவுக்காக ரிஸ்க் எடுத்தவர்களுககு காட்ட மறுக்கிறாராம். அதனால் சத்யா நடித்துள்ள படங்கள் ரிலீசாக முடியாமல் தடுமாறிக்கொண்டு கிடக்கின்றன.